1. பொருள்: வரைநாடனே! வேனிற்பருவத்து கொடிய சுரத்தைக் கடந்து பொருள் செயவிரும்பினாய். அப் பொருள் நின்னையே விரும்பும் இவளது முதற்சூலிற் பொருந்திப் பிறந்த சிறுவனின் முறுவலைக் காண்பதினும் சிறந்ததாமோ? 2. பொருள்: தலைவ! காடுகள் செறிந்த நாடனின் அன்பு மகளது அழகிய நுதல் பசக்கும்படி நீ பிரிந்து சென்றால் தாமரை மலர்போற் சிறந்த நின் புதல்வன் பாலுக்கு அழநேரிடும். (தலைவி யிறப்பள் என்பது குறிப்பு) 3. பொருள்: தோழீ! வேட்டுவன் பார்வைப் பறவை வைத்து விரித்த வலைக்கு அஞ்சி நெடியகாலுடைய ‘கணந்துள்’ என்னும் பறவை தனிமை கொண்டு கூவும் தெளிந்த ஓசை வயிரியரது கதுமென ஒலிக்கும் யாழ்நரம்போசையொடு கலந்து ஒலிக்கக்கூடிய வழியிடத்து பம்பையும் கதநாயும் உடைய வடுகர் திரியும் குன்றத்தைக் கடந்து, செம்பொன்தொடி கழலுவதை நோக்கி நம்மகன் நம்மையணைத்தபடியே அழுவதைக் |