பக்கம் எண் :

190தொல்காப்பியம் - உரைவளம்
 

இதன் பொருள்:   புல்லுதன்   மயக்கும்     புலவிக்  கண்ணும்1  தலைவன்  தனது   முயக்கத்தைத்
தலைவியிடத்துந்  தம்மிடத்தும்  இடைவிட்டு   மயக்குதலால்    தலைவிக்கண்  தோன்றி   புலவியிடத்தும்:
காமக்கிழத்தியர் புலந்து கூறுப.
  

உதாரணம்:
  

“மண்கணை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்
தண்டுறை யூரனெஞ் சேரிவந்தென
விண்கடுங்கள்ளி னகுதை களிற்றொடு
நன்கலனீயு நாண்மகிழிருக்கை
யலைபுகு பொருநர் பறையினானாது
கழறுபவென்பவவன் பெண்டிரந்திற்
கச்சினன், கழனினன் றேந்தார் மார்பினன்
வகையமை பொலிந்த வனப்பமை தெரியற்
சுரியலம் பொருநனைக் காணிரோவென
வாதிமந்தி பேதுற்றினையச்
சிதை பறைந்துரைஇச் செங்குணக்கொழுகு
மந்தண் காவிரிபோலக்
கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின்யானே”
2  

(அகம் -76)
   

இதனுள்     எஞ்சேரி வந்தெனக் கழறுபவென்ப அவன் பெண்டிரென  முன்னை  ஞான்று   புல்லுதன்
மயக்குதலால்  தலைவி  புலந்தவாறு  அது கண்டு காமக்கிழத்தி கொண்டுகை   வலிப்பலெனப்  பெருமிதம்
உரைத்தவாறுங் காண்க.


1. இளம்பூரணர் உரையினும் இவ்வுரை சிறக்கும்.

2. பொருள்: தோழீ!முழவொலியொடு காண்பார்க்கு மகிழ்ச்சி மிக யான் கூத்தாட அதுகாண அவன் வந்த
அவ்வளவிற்கே அவன் மனைவியானவள்,  கள்ளின் களிப்புடைய அஃதை என்பானின்   பரிசிலர்க்குக்
களிறும்  கலனும்  ஈயும்நாள்  ஓலக்கத்தில் புகும் பொருநர் அறையும் பறையொலியினும்  அடங்காமல்
அவனை  என்னொடு    சேர்த்துக்   கழறியுரைப்பாள்   என்று  கூறுவர்.   கச்சினனும்  கழனினனும்
தார்மார்பினனும்  ஆகிய பொருநனை (ஆட்டனத்தியை) இவ்வழிக்  கண்டீரோ  என  அவன்  காதலி
ஆதிமந்தியானவள்   பித்துற்று  வருந்துமாறு நேர்   கிழக்கே  ஓடும்  காவேரி   ஈர்த்துக்  கொண்டு
ஒழுகினாற்போல  யானும்  அவள்  கணவனைச்   சூள்கொண்டு   கைபற்றிக்   கோடலை   எண்ணி
விட்டேன்.