* பொருள்: சேம்பின் இலையுடைய நீர்ப்பரப்பில் தன் குட்டியுடன் வசிக்கும் பெண் நாய் உண்ணாமையால் அதற்கு இரை தேடிக்கொணர எழுந்த ஆண் நாயானது வாளைமீனொடு பொருதலால், நீர்ப் பொய்கை கலங்கிட அதனை விட்டுக் கள்ளுண்டு காஞ்சிமர நிழலிற் சென்று தம் கணவன்மாரின் பரத்தமை யொழுக்கம் பற்றிப் பாடும் படியான பொய்கை யூரனானவன், தன்தேரில் ஏற்றி வந்த பரத்தையர் என் நலனைப் பற்றி ஏசுவர் என்று கூறுவர் பிறர். அவர் அவ்வாறு பேசும் பேச்சோடு அவர் அடங்காமல் இருப்பது எதுபோல் என்றால் யானை கொல்லாமையால் பாகன் உயிரோடு இருப்பது போலாகும் அப் பரத்தையரும் பிறரும் சிறப்புடையார் போல இறுமாந்து செல்லுதற்குக் காரணம் அவர்கள் கொண்ட முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தாடும் இடத்துக்குயான் செல்லாமையே யாகும். இனியான் சென்றால் சூரியன் போம் பக்கமாகவே திரியும் நெருஞ்சிப் பூப்போல என் பக்கமாகவே அவனைத் திரியுமாறு செய்யேனாயின் சோழரது வல்லத்துப் புறங்காட்டில் போரில் உடைந்தோடிய ஆரியப் படைபோல என் கைவளையல்கள் உடைவனவாக. |