பக்கம் எண் :

கற்பியல் சூ.10201
 

எனச் சேரிப் பரத்தையராற் புலந்து தலைவனோடு கூறியவாறு காண்க. இன்னும் இதனானே,
 

“நீளிரும் பொய்கை யிரைவேட்டெழுந்த
வாளை வெண்போத்துணீஇய நாரைதன்
னடியறி வுறுதலஞ்சிப்பைப்பயக்
கடியிலம் புகூஉங் கள்வனைபோலச்
சாஅ யொதுங்குந்துறைகேழூரனோ
டொல்கா தாக வினிநாணுண்டோ
வருகதிலம்ம வெஞ்சேரிசேர
வரிவே யுண்கணவன் பெண்டிர் காணத்
தாருந்தானையும் பற்றியாரியர்
பிடிபயிர்ந்து தரூஉம் பெருங்களிறுபோலத்
தோள்கந்தாகக் கூந்தலிற் பிணித்தவன்
மார்புகடி கொள்ளே னாயினார்வுற்
றிரந்தோர்க்கீயா தீட்டியோன் பொருள்போற்
பரந்து வெளிப்படாதாகி
வருந்துகதில்லயா யோம்பிய நலனே”
1

(அகம் - 276)


அவள்     கத்தும்   ஒலி  கேட்டு நீ எழுந்து சென்றது சரியோ? அவள் நின் மார்புப் பசியமாலையை
அறுத்தது  சரியோ? நீ ‘நான் தீயவனல்லன் தெளிவாயாக’ என்று சொல்லி அவள் சிற்றடியைத் தாழ்ந்து
தங்கியது சரியோ? இப்போது சொல் யாம் நின்னைக் கோபியேமோ?

1 பொருள்:   பொய்கையில் இரையை வேட்டெழுந்த வாளை மீனை உண்ண வேண்டி நாரையானது தன்
அடியின்  ஒலியைக்  கேட்டு  வாளை  தப்பி  விடுமோ என அஞ்சி மெல்லக் காவலுள்ள வீட்டிற்புகும்
கள்வனைப்போல ஒதுங்கிச் செல்லும்படியான நீர்த் துறையுடைய ஊரனோடு நமக்குப்பழி உண்டாயினும்
உண்டாக.  இனி  நாணத்தை  நான்  கொள்ளல்  உண்டோ? எம்  சேரியிடத்து அவன் வருக. அவன்
மனைவியர் காணுமாறு அவன் மாலையையும் ஆடையையும் பற்றி,  ஆரியரின் பெண்யானை பயிற்றியப்
பழக்கத்தால் ஆண்யானையைப் பிணித்தாற்போல அவள் மார்பை என் தோள் கந்தாகக் கூந்தலாற்கட்டி
என்  பாற்கொள்ளவில்லையென்றால்  இரந்தோர்க்கு  ஈயாது  திரட்டி வைத்தவன் பொருள் பயனின்றி
மறைவிற் கிடப்பதுபோல என்தாய் காத்து வளர்த்த என் அழகு வெளிப்படாது அழிவதாக.