பக்கம் எண் :

200தொல்காப்பியம் - உரைவளம்
 

இது காமக்கிழத்தி என்னலந்தாவென்றது.
 

“உள்ளுதொறு நகுவறோழி வள்ளுகிர்
மாரிக் கொக்கின் கூரலகன்ன
குண்டுநீ ராம்பற் றண்டுறையூரன்
றேங்கம ழைம்பால் பற்றி யெம்வயின்
வான்கோ எல்வளை வௌவிய பூசற்
சினவிய முகத்தஞ் சினவாது சென்றுநின்
மனையோட் குரைப்ப லென்றலின் முனையூர்ப்
பல்லா நெடுநெறி வில்லினொய்யுந்
தேர்வண் மனையன் முந்தைப் பேரிசைப்
புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்
மண்ணார் கண்ணினதிரு
நன்னரான னடுங்கஞர்நிலையே”.
1

(நற்றிணை-100)
 

இது மனையோட்கு உரைப்பலென்றலின் நடுங்கினானென்றது.
 

‘கண்டேனின் மாயம்’ என்னும் மருதக்கலி (90)யுள்
 

“ஆராக்கவலி னொருத்திவந் தல்கற்றன்
சீரார் நெகிழஞ் சிலம்பச் சிவந்துநின்
போரார் கதவமிதித்த தமையுமோ
வாயிழையார்க்கு மொலிகேளா வவ்வெதிர்
தாழாதெழுந்துநீ சென்றதமையுமோ
மாருள் சினைஇ யவளாங்கே நின்மார்பி
னாறிணர்ப் பைந்தார் பறிந்ததமையுமோ
தேறிநீதீயேனலே னென்று மற்றவள்
சீறடிதோயாவிறுத்த தமையுமோ”
2


1 பொருள்:     தோழீ! மாரிக்காலக் கொக்கின் அலகு போலும் ஆம்பல் உள்ள தண்துறை யூரனானவன்,
என்  கூந்தலைப்  பற்றி  யீர்த்து  வைத்து  வளையலைக்  கழற்றிய போது உண்டான பூசலால் சினந்த
முகத்தோடு   அவனைப்  பார்த்து  ‘நான்  இதனை  நின்  மனைவிக்குச்  சொல்வேன்’  என்றதனால்,
தேர்வண்மலையனது  அவை  முன்னர்க்  கூத்தர்  இயக்கும்  முழவின்  கண்ணிடம்  அதிர்வது போல்
நடுங்கிய நல்லதையே ஆள்பவனாகிய அவனது நடுங்கு நிலையை நினையுந் தோறும் சிரிப்பேன்.

2 பொருள்:  தலைவ! ஒருத்தி அடங்காத முயக்கத்தால் தளர்ந்து வந்து நின் கதவைத் தட்டியது சரியோ?