பக்கம் எண் :

கற்பியல் சூ.10199
 

நின்பரத்தமையெல்லாம்      நின்றலைவிக்கு   உரைப்பலெனக்     கூறுவனவும்,   சேரிப்  பரத்தையரொடு
புலந்துரைப்பனவும், தலைவி கூற்றொடொத்து வருவனவும் பிறவாறு வருவனவுங் கொள்க.
 

“தொடுத்தென மகிழ்ந செல்லல் கொடித்தேர்ப்
பொலம்பூணன்னன் புன்னாடு கடிந்தென
யாழிசை மறுகிற் பாழியாங்க
ணஞ்ச லென்ற வாஅயெயின
னிகலடு கற்பின் மிஞிலியொடுதாக்கித்
தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது
தெறலருங் கடவுண் முன்னர்த் தோற்றி
மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்
தார்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்பநின்
மார்புதரு கல்லாய் பிறனாயினையே
யினியான் விடுக்குவெ னல்லெனமந்தி
பனிவார் கண்ணள் பலபுலந்துறையக்
கடுந்திறலத்தி யாடணிநசைஇ
நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்குநின்
மனையோள் வௌவலு மஞ்சுவல் சினைஇ
யாரியரலறத் தாக்கிப் பேரிசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சியன்ன வென்னலந்தந்து சென்மே”.
1

(அகம் -396)


1 பொருள் :   தலைவனே!   நன்னன் என்பான் புன்னாட்டைச் சினந்து எழுந்த போரில் பாழி என்னும்
இடத்தில்  நன்னன்  பகைவனாகிய  ஆஅய்  எயினன்  தன் மக்களைப் பார்த்து அஞ்சல் என்று கூறி
அவர்களைக்காக்கத்  தன்  சொல் தவறாதபடி அங்கு வந்த மிஞிலி என்னும் நன்னனின் நட்பாளனோடு
பொருது  உயிர்  துறந்தான். நீயோ முன்னர்க் கடவுள் முன்னர் என்கைப் பற்றிக் கூறிய சூளுறவு நீங்கி
என் ஆர்வம் மிகவும் நின் மார்பை எனக்குத் தாராமல் பிறன் ஆயினாய். இனியுன்னை விடமாட்டேன்.
செல்லாதே. ஆதிமந்தி பலவாகப்  புலந்து  தங்க  அவள்  காதலனாகிய ஆட்டன் அத்தியைக் காவிரி
கொண்டொளித்தது  போல   நின்  மனைவி  நின்னைக்  கொண்டு  செல்லினும்  செல்வள்.  அதற்கு
அஞ்சுவேன்.  அதனால் ஆரிய  வீரர்  அலறக்  தாக்கி  வடமலையில்  வில்லைப்  பொறித்து ஆரிய
வேந்தரைப்  பிடித்து  வந்த  சேரனது  வஞ்சியூர்  போலும்  என் வளமிக்க அழகை என்னிடம் தந்து
செல்வாயாக.