“எவ்வியிழந்த வறுமை யாழ்ப்பாணர்” |
(குறுந்-19) |
இது கற்பிற் புலந்தது. |
“தீதிலேமென்று தெளிப்பவுங் கைந்நீவி யாதென்று மெங்கண் மறுத்தரவில்லாயின்” |
(கலி -81) |
என்பது ஊடல், பிறவிடத்தும் ஊடுதலறிந்து கொள்க. |
“கலந்தநோய் கைம்மிகக் கண்படாவென்வயிற் புலந்தாயு நீயாகிற் பொய்யானே வெல்குவை” |
(கலி - 46) |
என்பது குறிபிழைத்துழிப் புலந்தது. |
“குணகடற்றிரையது பறைதபுநாரை” |
(குறுந்-128) |
என்பதனுள், நாரை தெய்வங் காக்கும் அயிரை இரையை வேட்டாற்போல் நமக்கு அரியளாயினாள் நீ வேட்டாயென்பத னாற் குறிபிழைத்துழி ஊடினமை கூறிற்று. பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து கொள்க. |
தோழி கூற்று |
155. | புலத்தலும் ஊடலும் ஆகிய விடத்தும் சொலத்தகு கிளவி தோழிக்குரிய. | (16) |
இளம் |
இது தோழிக்குரிய மரபுணர்த்திற்று* |
“அலந்தாரை யல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல்”1 |
(குறள் - 1303) |
இது கற்பு. |
* இச் சூத்திரப் பொருள்: புலவியும் ஊடலும் தலைவன் தலைவியரிடத்துமிக்குத் தோன்றிய போது ஆற்றுவித்தற்குக் கூறும் சொற்கள் தோழிக்கு உரியவாம். 1 பொருள் : தம்மிடம் புலவி கொண்டவரை அது நீக்கிப் புல்லாது விடுதலானது, முன்னமேயே துன்பமுற்றவரை மேலும் துன்பமான நோயைச் செய்வது போலாகும். |