1 பொருள்: தன்னையீனும் தாயின் உயிரைப் போற்றாத கூரிய உகிருடைய நண்டினை நரிதின்று ஓடும் ஊரனே! அன்பை முதலாகக் கொண்டு வந்த காதலை இப்பைந் தொடியுடைய தலைவி மாட்டுப் பெற்றது என்? 2 பொருள்: பக்கம் 219ல் காண்க. 3 பொருள்: தோழீ! மழைத்துளி பெறும் வேட்கையால் வானத்துமிசையிருந்து பாடும் வானம்பாடிபோல யான் அவரது இருவகைக் குறியிடத்தும் பெறும் அவர் அருளை விரும்பி நிறைந்த அன்புனையேன் யானாக இருக்க அவர் மழை பெய்த நடு இரவில் யான் இடம் மாறிப்போக அதனால் இரவுக் குறிவாய்க்காமல் என் மீது கொண்ட பழியை நினக்கு அவர் உரைப்பர். 4 பொருள்: தோழியே! தேனூறும் கொய்யப்பட்ட மலர் மாலையுடைய பாண்டியனது அழகிய மார்பை யான் கூடாமலேயே இராப் பொழுது கழிந்தது எவ்வாறென்றால் முதலில் யான் ஒரு காரணத்தை மேலிட்டு ஊடல் கொள்ள அதை அவர் உணர்த்த நான் தெளியா |