பக்கம் எண் :

222தொல்காப்பியம் - உரைவளம்
 

இதனுள், யானுணர்த்தத் தானுணரானெனப் பாடாண்திணைக் கைக்கிளையுட்டலைவி கூறியது காண்க.
 

தோழி கடிந்துரை
 

156.

பரத்தை மறுத்தல் வேண்டியும் கிழவி
மடத்தகு கிழமை யுடைமை யானும்
அன்பிலை கொடியை யென்றலும் உரியள்.
 

(17)

இளம்
 

இதுவும் தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்திற்று. இது, சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.1
 

உதாரணம்
 

“மகிழ்செய தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை
முகிழ்செய முள்கிய தொடர்பவள் உண்கண்
அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய்
இமிழ்திரைக் கொண்க கொடியை காண்நீ
இலங்கேர் எல்வளை ஏர்தழை தைஇ
நலஞ்செய நல்கிய தொடர்பவள் சாஅய்ப்
புலந்தழப் புல்லாது விடுவாய்

இலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காண்நீ”
2

(கலித் - 125)
 

எனவரும்.


தவளாயினேன். அதுகண்டு  அவர்  என்பால்  ஊடல்  கொள்ள  யான் அவரைத் தெளிவித்தும் தான்
உணரார் ஆயினார். இப்படியே மாறிமாறி ஊடலும் தெளிதலும் ஆகப் பொழுது கழிந்தது.

1 சூத்திரப்   பொருள்  :  தலைவனின்    பரத்தமை    யொழுக்கத்தை    மறுப்பதற்காகவும்,  தலைவி
அவ்வொழுக்கத்தை  மறுக்க  அறியாத  மடமைப்பட்ட அறிவுக்குரியளாய் இருக்கும் காரணத்துக்காகவும்
தோழியானவள் தானே தலைவனிடம் ‘நீ எம் தலைவியிடம் அன்புடையையல்லை; இவட்குக் கொடுமையே
செய்கின்றாய்’ என்று கூறுதற்கும் உரியள் என்றவாறு.

2 பொருள்:    தலைவ!   மகிழ்   செய்யும்   தேன்மொழியுடையாளின் இளமுலை தோன்றும் பருவத்தே
அவளுடன்  கூடிய  கூட்டத்  தொடர்பை  அவளின்  கண்கள்  நீர் உறைத்துக் காட்டவும் அதற்காகக்
கலங்காமல் விட்டுச்