பக்கம் எண் :

கற்பியல் சூ.10183
 

செய்யா மாயின் உய்யாமையின்
செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதவண்
உலமந்து வருகஞ் சென்மோதோழி
ஒளிறுவாள் தானைக கொற்றச் செழியன்
வெளிறில கற்பின் மண்டமர் அடுதொறும்
களிறுபெறு வல்சிப் பாணன் எறியுந்
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர் தன்வயிறே”
1

(அகம் - 106)
  

இவை பரத்தை கூற்று.
  

பல்வேறு  புதல்வர்க்  கண்டு  நனியுவப்பினும்  என்பது-பலவகைப் புதல்வரைக் கண்டு மிகவும் உவந்து
கூறிய வழியுமென்றவாறு.
  

உதாரணம்:
  

“நயந்தலை மாறுவார் மாறுக மாறாக்
கயந்தலை மின்னுங் கதிர்விடு முக்காழ்ப்
பயந்த எங்கண்ணார யாங்காண நல்கித்
திகழொளி முத்தங் கரும்பாகத்தைஇப்
பவழம் புனைந்த பருதிசுமப்பக்
கவழம் அறியாநின் கைபுனை வேழம்
புரிபுனை பூங்கயிற்றிற் பைபயவாங்கி
அரிபுனை புட்டிலினாங் கணீர்த்தீங்கே
வருக எம் பாகமகன்”.


1. பொருள்:  தோழீ!   வயது முதிர்ந்த சிச்சிலிப் பறவையானது, தாமரை பூத்த வயலில்  நெற்பொரியைத்
தூவினாற்போல் பிறழும் சிறு மீன்களை உண்ணத்  தாமரை இலையில் மெல்ல மெல்ல அசைந்து வந்து
தங்கும் படியான நீர்த்துறையுடைய  ஊரனாகிய   தலைவனது  மனைவியானவள், அவனை  நம்மொடு
சார்த்திப் புலந்து பேசும்  என்பர்.  நாம்  அவ்வாறு  புலந்து  பேசும்படியாக  அவனொடு  ஒன்றும்
செய்யவில்லையென்றாலும் அவள் கூறும் பழியினின்றும் மீளேம் ஆதலின், கொற்றச் செழியன் போரில்
பகையை  அடுந்தோறும்  களிற்றை  உணவாகப்  பெறும்  பாணனானவன்  அடிக்கும் தண்ணுமையின்
கண்ணிடம்  அதிர்வதுபோல  அவள்  வயிறு  அலையும்படி  நாம்  நம் வளையல் ஒலிக்கக் கைகளை
வீசியவாறு சிறிது பொழுது அவள் இருக்குமிடமாக உலாவி வருவோம். வருவாயாக,