1. பொருள்: வயலில் உழவர் நெற்சூட்டுடன் அரிந்து கொணர்ந்த ஆம்பலை ஈன்ற அணிமையுடைய பசுதின்று மிஞ்சியதை உழவரின் உழுதொழில் விட்டு ஓய்வெடுக்கும் பகடுகள் தின்னும்படியான ஊருக்குடைய தலைவனின் தொடர்பை (நீண்டநாள் முயக்கத்தை)நீ விரும்புவாயாயின் ஏ தலைவியே! என் சொல்லை ஏற்றுக்கொள். நீ பெரிய அழகும் குணமும் உடையை அவனோ நடுஇரவில் பொய்கையிற் சென்று புதுமலர் உண்ணும் வண்டு போல்வன். ஆண்மகன் அல்லன் என்னும் இவ்வூர். (ஆதலின் புலவாதே அவனை ஏற்றுக் கொள்க). 2. இத்தொடர் தவறு. காமக் கிழத்தி கூற்றே கூற வேண்டுவது. இதன் விளக்கம் பற்றித் தாய் போற்கழறி (32) என்னும் சூத்திர உரைகளின் முடிவில் சிவ விளக்கம் காண்க. |