பக்கம் எண் :

கற்பியல் சூ.10187
 

கண்ணும் என்றவாறு. பின்னை என்றதனால் ஏனைய வாயில்களை மறுத்த வழியென்று கொள்க.
  

*”புள் இமிழ் அகல்வயல் ஒலிசெந்நெ லிடைப்பூத்த
முள்ளரைத் தாமரை முழுமுதல் சாய்த்ததன்
வள்ளிதழ் உறநீடி வயங்கிய சுருகதிர்
அவை புகழரங்கின் மேலாடுவாள் அணிநுதல்
வகைபெறச் செரீஇய வயந்தகமே போல்தோன்றுந்
தகைபெறு கழனியந் தண்துறை யூரகேள்”.
 

அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி
மணிபுரை செவ்வாய்நின் மார்பகல நனைப்பதால்
தோய்ந்தாரை அறிகுவல் யானெனக் கமழுநின்
சாந்தினாற் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ”.
 

“புல்லல் எம்புதல்வனைப் புகலகல் நின்மார்பின்
பல்காழ் முத்தணியாரம் பற்றினன் பரிவானான்
மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பின்
பூணினாற் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ”

  

கண்டேஎம் புதல்வனைக் கொள்ளாதி நின் சென்னி
வண்டிமிர் வகையினர் வாங்கினன் பரிவானால்
நண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழுநின்
கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ;

  

என வாங்கு,
  

“பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே யவர்வயின் சென்றீ அணிசிதைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து”

(கலித் -79)
 

எனவரும்.
  

மனையோள்   ஒத்தலின் தன்னோரன்னோர் மிகையெனக் குறித்த கொள்கைக் கண்ணும் என்பது-தான்
மனையாளை  ஒத்தலாற்  தன்  போல்வார்  தலைவற்கு  மிகையெனக் குறித்தகோளின் கண்ணும் கூற்று
நிகழும் என்றவாறு.


* பொருள்: பக்கம் 118ல் காண்க.