1. பொருள்: பிரப்பம் பழத்தை பொய்கைக் கெண்டை மீன் கதுவுகின்ற தண்துறையூரனது பெண்ணானால் ஏடீ! நின் நெஞ்சத்திற்கண் துன்பம் பலவாகுக. மேகம் போலும் வண்கையும் யானையையும் உடைய அஞ்சி என்பான் கொல்லும் பாசறையுள்ள இரவூர் தூங்கும் நாள் சிலவுளதாதல் போல நீ தூங்கும் நாள்கள் சிலவேயாகுக. 2. பொருள்: கூந்தல் போலும் நெறிப்பையுடைய ஆம் பலந்தழையை உடுத்தி மிக்க வெள்ளம் வந்த நீர்த்துறையில் ஆடுதற்கு விரும்பி யாம் தலைவனுடன் செல்வேம். தலைவியானவள் அதற்கு அஞ்சுவதுடையளானால் தான்தன் கணவன் மார்பை எம்முடன் கலவாதபடி எழினியின் போர் முனையில் அகப்படுக்கப்பட்ட பசுக் கூட்டங்களைக் காப்பதுபோலக் காத்துக் கொள்வாயாக, |