பக்கம் எண் :

202தொல்காப்பியம் - உரைவளம்
 

இதனுட்  பரந்து  வெளிப்படாதாகி  வருந்துக  என்னலம்  என்றமையிற்  சேரிப்   பரத்தையைப் புலந்து
கூறுதன் முதலியன வுங்கொள்க. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக.
 

அகம்புகல்மரபின் வாயில் கூற்று
 

150.

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் கிழமையிற் கிழவோற் குரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய
 

(11)

இளம்.
 

என் - எனின், அகம்புல் மரபினவாய வாயில்கள் கூற்று நிகழுமாறு உணர்த்திற்று.
 

(இ-ள்)  கற்பு  முதலாகச்  சொல்லப்பட்டனவும்  பிறவுமாகிக்   கிழவோள்  மாட்டுளதாகிய தன்மைகளை
முகம்புகு தன்மையானே
1 தலைமகற்கு உரைத்தல் அகம்புகு மரபின்2 வாயில்கட்குரிய என்றவாறு.
 

செய்யுளியலுள்   “வாயிலுசாவே   தம்முளுரிய”  (சூ-191)  என்பதனால்,  தலைமகற்குரைத்தலேயன்றித்
தம்முள் தாம் கூறுதலும் உரியரென்று கொள்க.
 

“மதவலியானை மறலிய பாசறை
இடிஉமிழ் முரசம் பொருகளத்தியம்ப
வென்று கொடி எடுத்தனன் வேந்தனுங் கன்றொடு
கறவை புல்லினம் புறவு தொறுகளக்
குழல்வாய் வைத்தனர் கோவலர் வல்விரைந்
திளையர் ஏகுவனர் பரப்ப விரியுளைக்
கடுநடைப்புரவி வழிவாய்ஓட
வலவன் வள்புவலி உருப்பப்புலவர்


1 முகம்புகு தன்மை - தலைவன் எதிர் சென்று முகம் நோக்கிப் புகலும் தன்மை.

2 அகம்புகு  மரபு  -  வீட்டினுட்  சென்று  தலைவன்  தலைவியருடன்  அடிக்கடிப்  பேச்சு நிகழ்த்தும்
வழக்கம்.