1 பொருள்: செவிலி நற்றாய்க்குக் கூறியது. தேன்கலந்த சுவையான இனிய பாலைப் பொற்கலத்துக் கொண்டு ஒரு கையில் ஏந்தி இதனையுண்க என்று சொல்லிப் புடைப்பு அமையச் சுற்றிய ஒரு கோலால் அடிப்பது போல் ஓச்ச, உண் என்னும் ஏவலை மறுத்து முத்துப்பரல் உள்ள காற்சிலம்பு ஒலிப்பச் செவிலியர் பிடிக்கவும் தப்பி அவர் மெலியுமாறு பந்தர்ப் பக்கம் ஓடி உண்ண மறுக்கும் சிறிய விளையாட்டுப் பிள்ளையாக இருந்தவள், இன்று தன் கணவன் குடி வறுமை யெய்தத் தன் தந்தை தந்த உணவையும் மறுத்து ஒழுகும் நீர்வற்ற ஆங்காங்கே அறல் காணப்படுதல் போல நாள் விட்டு நாள் விட்டு உண்ணும் ஆற்றலைப் பெற்றாள். இத்தகைய அறிவும் ஒழுக்கமும் எங்கு உணர்ந்தாள். 2 பொருள்: பாணர் முல்லைப் பண்பாடவும் தலைவி முல்லைப் பூச்சூடவும்தலைவன் வெறுப்பு நீங்கிய கொள்கையொடு தன் புதல்வனொடு சிறந்து வீற்றிருந்தான். |