பக்கம் எண் :

206தொல்காப்பியம் - உரைவளம்
 

நச்.
 

இது   விருந்து   முதலிய   வாயில்கள்   போலாது   அகநகர்க்   கட்புகுதற்குரிய  வாயில்கள்  கூற்று
உணர்த்துகின்றது.
 

இதன் பொருள்: கற்பும் - கணவன்    முதலியோர்  கற்பித்த  நிலையில்  திரியாத   நல்லொழுக்கமும்,
காமமும்-அன்பும்   நற்பால்    ஒழுக்கமும்-எவ்வாற்றானுந்    தங்குலத்திற்கு     ஏற்றவாற்றான்   ஒழுகும்
ஒழுக்கமும்,  மெல்    இயற்பொறையும்-வல்லென்ற  நெஞ்சொடு பொறுக்கும் ஆனைபோலாது ஒருதலையாக
மெல்லென்ற   நெஞ்சினராய்ப்   பொறுக்கும்   பொறையும்,    நிறையும்-மறை    புலப்படாமை  நிறுக்கும்
நெஞ்சுடைமையும்,  வல்லிதின் விருந்து  புறந்தருதலும்-வறுமையுஞ்   செல்வமுங்   குறியாது வல்லவாற்றான்
விருந்தினரைப்   பாதுகாத்து   அவர்    மனமகிழ்வித்தலும்,  சுற்றம்  ஓம்பலும்  -  கொண்டோன்புரக்கும்
நண்புடை  மாந்தருஞ்,  சுற்றத்தாருங்  குஞ்சர  முதலிய காலேசங்களும்  பல    படைமாக்களும் உள்ளிட்ட
சுற்றங்களைப்  பாதுகாத்து  அவை உண்டபின் உண்டலும்,   அன்னபிறவுங்   கிழவோள் மாண்புகள்-அவை
போல்வன   பிறவுமாகிய   தலைவியுடைய    மாட்சிமைகளை    முகம்புகன்   முறைமையிற்  கிழவோற்கு
உரைத்தல்-அவன்  முகம்  புகுதும்  முறைமை  காரண்த்தால்  தலைவற்குக்   கூறுதல்,   அகம்புகன் மரபின்
வாயில்கட்கு    உரிய-அகநகர்க்கட்    புகுந்து  பழகி  அறிதன்  முறைமையினையுடைய வாயில்களுக்குரிய
என்றவாறு.
 

அன்ன     பிறவாவன:-   அடிசிற்றொழிலும்    குடிநீர்மைக்கேற்ற    வகையான்  தலைமகள்  ஒழிந்த
தலைமகள்ஒழிந்த  தலைமகளிரையும்  மன    மகிழ்வுறுத்தலும்    காமக்கிழத்தியர்   நண்பு  செய்து நன்கு
மதிக்கப்படுதலும்  போல்வன.  புகலுதல்-மகிழ்தல்,    செவிலி    கூறாமை  கொள்க.  அவட்கு முகம்புகண்
முறைமையின்மையின்.
 

உதாரணம்
 

“கடல் பாடவிந்து தோணிநீங்கி
கெடுநீரிருங் கழிக்கடுமீன் கவிப்பினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினு
மாணிழை நெடுந்தேர் பாணிநிற்ப்ப்
பகலு நம்வயி னகலானாகிப்
பயின்று வருமன்னே பனிநீர்ச் சேர்ப்ப
னினியே மணப்பருங் காமந்தணப்ப நீங்கி
வாராதோர் நமக்கியாஅ ரென்னாது