பக்கம் எண் :

கற்பியல் சூ.11207
 

மல்லன்மூதூர் மறையினை சென்று
சொல்லி னெனவனோபாண வெல்லி
மனைசேர் பெண்ணை மடல்வாயன்றி
றுணையொன்று பிரியினுந்துஞ்சாகாணெனக்
கண்ணிறை நீர்கொண்டுகரக்கு
மொண்ணுதலரிவை யானென் செய்கோவெனவே”
1

(அகம் -50)
 

இதனுட்  காமமிகுதியாற்    கண்தாமே   அழவும், கற்பிற் காக்குமெனத் தலைவி பொறையும் நிறையுந் தோழி
பாணற்குக்  கூறினாள்.  அவன்  தலைவற்கு   இவ்வாறே   கூறுவனெனக்  கருதி. ‘இனி’ என்றதனாற் கற்பும்
பெற்றார்.

 

தலைவற்குக்  கூறுவன  வந்துழிக்  காண்க. ‘வாயிலுசாவே தம்முளுமுரிய’ (512)  என்பதனால் தலைவற்கு
உரையாமல் தம்முட்டாமே உசாவுவனவும் ஈண்டே கொள்க.
 

“அணிநிற வெருமையாடிய வள்ளன்
மணிநிற நெய்தலாம்பலொடுகலிக்குங்
கழனியூரன் மகளிவள்
பழனவூரன் பாயலின் றுணையே”
2

(ஐங்குறு-96)
 

இது கற்புக் கூறியது.


1. பொருள்:     பாணனே!    தோணிகள்  கடலிற்  செல்லாமல்  கரையில்  இருத்தலால்  சுறாமீன்கள்
அவற்றிற்பாயும் படியாகப் பரதவர் நடமாடும் நிலையில் இருந்தாலும் அலர் தூற்றும் பெண்டிர் தம்மைப்
பற்றி  அலர்  தூற்றினாலும்  தலைவன்  தம்  தேர் காலம் தாழ்த்து நிற்கும்படியாகப் பகலிலும் நம்மை
நீங்காமல்  வந்து  போவான்.  இது  களவுக்  காலத்து நிகழ்ச்சி.  இக்கற்பு காலத்தில் தனக்கு வேட்கை
நீங்குதலால் சென்ற விடத்தினின்றும்  மீண்டு வாராதவர் நமக்கு என்ன உறவுடையர் என எண்ணாமல்
மனையில்   உள்ள  பனைமரத்து  அன்றில்  ஒன்று  பிரியினும்  மற்றொன்று  துஞ்சாது  எனத்  தன்
நெஞ்சுக்குக் கூறிக்கண்களில் நீர் நிறைந்தனள் தலைவி. அதற்கு யான் (தோழி) என் செய்யவல்லேன்?
இதை  நீ  மூதூரிடத்து மறைவாய்ச் சென்று தலைவனுக்குக் கூறின் என்ன குறைவரும் உனக்கு?-தோழி
பாணனிடம் கூறியது.

2. பொருள்:   அழகிய நிறமுடைய  எருமையுழுத    சேற்றில்  நெய்தலானது  ஆம்பலொடு  தழைக்கும்
கழனியூரனுக்கு மகளாகிய இவள் பழனவூரனுக்குப் பாயலில் அமைந்த நல்ல துணையாவாள்.