செவிலி கூற்று |
151. | கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக் குரிய வாகும் என்ப. | (12) |
பி.இ.நூ. |
நம்பியகப் 104, இல. வி. 472. |
முன்வரு நீதியும் முயங்கியல் முறையும் பின்வரு பெற்றியும் பிறவும் எல்லாம் தெற்றெனக் கூறல் செவிலித் தாய்க்கும் உற்ற அறிவர்க்கும் உரிய என்ப |
இளம் |
என்-எனின், செவிலிக்குரிய கூற்று வருமாறுணர்த்திற்று. |
(இ-ள்) இறந்த காலத்தினும் நிகழ்காலத்தினும் எதிர் காலத்தினும் தன் குலத்திலுள்ளார் வழிகொள்ளுமாறு நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலுஞ் செவிலிக்கு உரித்து என்றவாறு, |
இறந்த கால முதலியவற்றாற் கூறுதலாவது முன்புள்ளார் இவ்வாறு செய்து நன்மை பெற்றார் இவ்வாறு செய்து தீமை பெற்றார் எனவும் இப்பொழுது இன்னோர் இவ்வாறு செய்து பயன்பெறாநின்றாரெனவும் இவ்வாறு செய்தார் பின்பு நன்மை தீமை பெறுவர் எனவுங் கூறுதல். |
அவை, அறனும் பொருளும் இன்பமும் பற்றி நிகழும். அவையாவான, தலைமகள் மாட்டும் உலகத்தார் மாட்டும் ஒழுகும் திறன் கூறுதல்.1 |
அவை, மனையாளைப் பற்றி வருதலிற் காமதந்திரத்துட் பாரியாதிகார2மெனக் கூறப்பட்டன. அறம் பற்றி வருதல் |
1 தலைமகன் மாட்டும் உலகத்தார் மாட்டும் அறனும் பொருளும் இன்பமும் பற்றி ஒழுகுந்திறம் கூறுதல் என இப் பகுதிக்குப் பொருள் காண்க. 2 பார்யாதிகாரம்-பார்வை-மனைவி-மனைவியைப் பற்றிய அதிகாரம். |