பின்துஞ்சி முன்னுணரும் பேதையை யான்பிரிந்தால் என்துஞ்சுங் கண்கள் எனக்கு” |
எனவும்வரும். இவை நல்லவை யுரைத்தல். |
“எறியென்றெதிர் நிற்பாள் கூற்றம், சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி -அட்டதனை உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை”1 |
(நாலடி-363) |
எனவும், |
“தலைமகனில் தீர்ந்தொழுகல் - தான் பிறர்இல் சேறல் நிலைமையில் தீப்பெண்டி ரில்சார்தல் - கலனணிந்து வேற்றூர் புகுதல் விழாக்காண்டல் நோன்பெடுத்தல் கோற்றொடியார் கோள்அழியும் ஆறு” |
(அறநெறிச்-94) |
எனவும் வரும். இந்நிகரான அல்லவை கடிதலாம். |
பிறவும் அன்ன. |
நச் |
இது செவிலிக்குரியவாகுமென்ப. இது செவிலிகூற்று உணர்த்துகின்றது. |
இதன் பொருள்: கழிவினும், வரவினும், நிகழ்வினும் வழி கொள-மூன்று காலத்துத் தத்தங் குலத்திற்கு ஏற்கும்படியாக, நல்லவை உரைத்தலும்-முற்கூறிய கற்பு முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும் அல்லவை கடிதலும் -காமநுகர்ந்த இன்பமாகிய கற்பிற்குத் தீயவற்றைக் கடிதலும் செவிலிக்கு உரிய ஆகும் என்ப - செவிலித்தாய்க்கு உரியவாகுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
1. பொருள்: கணவனைச் சினம்மூட்டி ‘அடி’ என்று எதிர் நிற்பவள் அவனுக்குச் கூற்றம். காலைப்போதில் சமையலறை சென்று சமைத்து உண்பியாதவள் கணவனுக்குநோய். சமைத்ததைப் பரிமாறாதவள் வீட்டில் வாழும்பேய். இம்மூவரும் கணவனைக் கொல்லும் படைபோல்வாராவர். |