பக்கம் எண் :

212தொல்காப்பியம் - உரைவளம்
 

உதாரணம்
 

“காட்சினியாள் காதலன் காதல் வகைபுனைவா
ளுட்குடையாளூராணியல்பினா -ளுட்கி
யிடனறிந்தூடியினிதினுணரு
மடமொழி மாதராள் பெண்”
1

(நாலடி - 384)
 

கட்கினியாள்,  இதுகாமம்,  வகைபுனைவாள்,  இது  கற்பு  உட்குடையாள், இஃது ஒழுக்கம்,  ஊராண்மை,
இது சுற்றம் ஓம்பல், ஊடியுணர்தல், அல்லவை கடிதல்.
 

“நாலாறு மாறாய் நனி சிறிதாயெப்புறனு
மேலாறு மேலுரை சோரினு - மேலாய
வல்லாளாய் வாழுமூர் தற்புகழ மாண்கற்பி

னில்லாளமர்ந்ததேயில்”
2

(நாலடி - 383)
 

என்னும் வெண்பா விருந்துபுறந்தருதல் கூறியதுமாம்.
 

இனி ‘ஆகும்’ என்றதனானே செவிலி நற்றாய்க்கு உவந்துரைப்பனவுங் கொள்க.
 

“கானங் கோழிக் கவர் குரற்சேவ
னுண்பொறி யெருத்திற்றண் சிதருறைப்பப்
புதனீர் வாரும் பூநாறுபுறவிற்
சீறூரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செல்லினுஞ்

சேந்து வரலறியாது செம்மறேரே”
3

(குறுந் - 242)
 

“மறியிடைப்படுத்த மான்பிணை போலப்
புதல்வனடு வணனாக நன்று
மினிது மன்றவவர் கிடைக்கை முனிவின்றி
நீனிற வியலகங் கவைஇய

வீனுமும்பரும் பெறலருங் குரைத்தே”
4

(ஐங்குறுநூறு -401)


1 பொருள்: பக்கம் 210ல் காண்க.

2 பொருள்:பக்கம் 46ல் காண்க.

3 பொருள்: பக்கம் 204ல் காண்க.

4 பொருள்:   மான்   கன்று    இடையில்   கிடக்க  மானும்  பிணையும்  இருப்பதுபோலப்  புதல்வன்
இடையிருக்கத்