256. தபுதாரநிலை புனையிழை யிழந்தபிற் புலம்பொடு வைகி மனையகத் துறையு மைந்தனிலை யுரைத்தன்று. (இ - ள்.) அணிந்த ஆபரணத்தினையுடையாளை இழந்தபின் தனிமையுடனே தங்கி இல்லிடத்து அவதரிக்கும் ஆண்மகன் முறைமையைச் சொல்லியது எ-று. வ - று. பைந்தொடி மேலுலக மெய்தப் படருழந்த மைந்தன் குருசின் மழைவள்ளல்-எந்தை 2தவுதாரத் தாழ்ந்த தனிநிலைமை கேளாச் செவிடா யொழிகென் செவி. (இ - ள்.) பச்சென்ற வளையினையுடையாள் சுவர்க்கத்தைப்பொருந்தவருத்தமுற்ற ஆண்மகன், தலைவன், மழைபோலக் கொடுக்கும் உபகாரி, என்னுடைய சாமி மனையாளை இழந்தழுந்தின தனியான நிலைமையைக் கேளாத செவிடாய் போக, என் செவி எ-று. (3) 257.தாபதநிலை 1குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக் கருந்தடங் கண்ணி கைம்மைகூ றின்று. (இ - ள்.) குருந்தப்பூ மலரும் மாலையினையுடைய கணவன் இறந்தானாகக் கரியபெரிய கண்ணினையுடையாள் வைதவியமெய்தியவாற்றைச் சொல்லியது எ-று. வ - று. கலந்தவனைக் கூற்றங் கரப்பக் கழியா தலந்தினையு மவ்வளைத் தோளி-உலந்தவன் தாரொடு பொங்கி நிலனசைஇத் தான்மிசையும் காரடகின் மேல்வைத்தாள் கை. (இ - ள்.) தன்னுடனே கூடின கொழுநனைக் கூற்றுவனொளிப்பத்தான் இறந்து படாது நொந்துவருந்தும் அழகிய வளைத்தோளினையுடையாள், தன்னைவிட்டு இறந்தவன் மாலையோடு கோபித்து வெறுநிலத்திலே வதிந்து தான் அருந்தும் கரிய அடகின்மேலேகையை வைத்தாள் எ-று. (4) 258. தலைப்பெயனிலை இன்கதிர் முறுவற்பாலக னென்னும் தன்கட னிறுத்ததாய் தபுநிலை யுரைத்தன்று. (இ - ள்.) இனிய ஒளிநகையினையுடைய பிள்ளையென்னும்தான் கொடுக்கக் கடவதனைக் கொடுத்த மாதர் இறந்தமுறைமையைச் சொல்லியது எ-று.
1. புறநா. 248, உரை, மேற். (பி-ம்.)2. 'தபுதாரத்'. |