பக்கம் எண் :

வ - று.1இடம்படு ஞாலத் தியல்போகொடிதே
தடம்பெருங்கட் பாலக னென்னும்-கடன்கழித்து
முள்ளெயிற்றுப் பேதையாள் புக்காள் முரணவியா
வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய்.

(இ - ள்.) அகன்ற பூமியினது தன்மையோ கொடியதொன்றே!மிகப்பெரிய கண்ணினையுடைய பிள்ளையென்று சொல்லும்கொடுக்கக் கடவதனைக் கொடுத்து முட்போலக் கூரியபல்லினையுடையாள் தலைப்பட்டாள், மாறுபாடு கெடாதவளப்பம் மிக்க எயிற்றினையுடைய கூற்றுவன்வாயிலே எ-று.

(5)

259. பூசன்மயக்கு

பல்லிதழ் மழைக்கட் பாலகன் மாய்ந்தெனப்
புல்லிய பெருங்கினைப்பூசல் கூறின்று.

(இ - ள்.) பூவையொத்து மழைபோலக்குளிர்ந்த கண்ணினையுடைய பிள்ளை இறந்தானாகப் பொருந்திய பெரிய சுற்றத்தினது ஆரவாரத்தினைச் சொல்லியது எ-று.

பல்லிதழென்றார் பல இதழினையுடைய பூவை,ஆகுபெயரான்.

வ - று. அலர்முலை யஞ்சொ 2லவணொழியவவ்விற்
குலமுதலைக் கொண்டொளித்த லன்றி- நிலமுறப்
புல்லிய பல்கிளைப் பூசல் பரியுமோ
கொல்லிய வந்தொழியாக் கூற்று.

(இ - ள்.) பணைத்த முலையினையும் அழகிய சொல்லினையுமுடைய தலைவி அவ்விடத்தே ஒழிய அம்மனையிற் குலத்திற்கு மூலமாகிய பிள்ளையைக் கைப்பற்றி மறைத்தலல்லது நிலத்திலே மிகப் பொருந்திய சுற்றத்தின் ஆரவாரத்திற்கு இரங்குமோ? கொல்வான்வேண்டி வந்து தவிராத கூற்றம் எ-று.

கூற்று, பூசல் பரியுமோவென்க எ-று.

(6)

260. இதுவுமது

வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பினும்
ஆய்ந்த புலவ ரதுவென மொழிப.

(இ - ள்.) அரசன் இறந்தானாக அகன்ற பூமியினுள்ளார் இரங்கினும் ஆராய்ந்த அறிவினையுடையோர் முன்பிற்றுறையென்று சொல்லுவர். எ-று.

வ - று. எண்ணி னிகல்புரிந்தோ ரெய்தாததில்போலும்
கண்ணினொளிர் வேலான் கரந்தபின் -அண்ணல்
புகழொடு பூசன் மயங்கிற்றாற் பொங்கும்
அகழ்கடல் வேலி யகத்து.

(இ - ள்.) விசாரிப்பிற் போரினை விரும்பிய வீரர் பெறாதது ஒன்றுமில்லை போலும்:கண்ணிற்கு எறிக்கும் வேலினையுடையான் இறந்த.


1. தொல். புறத். சூ. 19, இளம், மேற். 2. (பி-ம்.)'லவளொழிய'.