பின்பு தலைவனுடைய கீர்த்தியுடன் ஆரவாரம் தலைமணந்ததால், மிகா நின்ற அகழ்ந்தகடலை வேலியாகவுடைய பூமியிடத்து எ-று பூமியிடத்துப் புகழொடு பூசல் மயங்கிற்றாலென்க. (7) 261. மாலைநிலை கதிர்வேற் கணவனொடு கனையெரி முழுக மதியேர் நுதலி மாலைநின் றன்று. (இ - ள்.) ஒளியால் மிக்க வேலினையுடைய கொழுநனொடு செறிந்த நெருப்பிலே புகுவான் வேண்டிப் பிறையையொத்த நெற்றியினையுடையாள் மாலைக்காலத்திலே நின்றது எ-று. வ - று. சோலை மயிலன்னா டன்கணவன்சொல்லியசொல் மாலை நினையா மனங்கடைஇக் - காலைப் புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள் அகையழ லீமத் தகத்து. (இ - ள்.) பொழின்மயிலை அனையாள், தன் கணவன் பகர்ந்த வார்த்தையை மாலைக்காலத்திலேநினைத்து மனத்தை முடுக்கிக் காலைப் பொழுதிலேமூளும் தழல் போன்ற வேலினையுடையான்தன் துணையாகிநின்றாள், கொழுந்துவிட்டெரியும் நெருப்புப் பொருந்தியசுடுகாட்டகத்து எ-று. ஈமத்தகத்துப் புணர்ப்பாகிநின்றாளென்க. (8) 262. மூதானந்தம் கயலேர் கண்ணி கணவனொடு முடிய வியனெறிச் செல்வோர் வியந்துரைத் தன்று. (இ - ள்.) கயலையொத்த விழியினையுடையாள்தன் கொழுநனோடு இறந்துபட அகன்ற வழியிடத்துப்போவார் கண்டு அதிசயித்துச் சொல்லியது. எ-று. வ - று.1ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க் கீருயி ரென்ப ரிடைதெரியார்-போரில் விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும் உடனே யுலந்த துயிர். (இ - ள்.) ஒரு பிராணனாக அறிக, ஒக்க மணந்தவர்க்கு; இரண்டு பிராணனென்று சொல்லுவர் நடு ஆராயாதார்; பூசலிடத்து நஞ்சைத் தாங்கும் வேலினையுடையாற்கும்விளர்த்த வளையினை யுடையாட்கும் ஒக்க விட்டதுபிராணன், ஆதலால் எ-று. (9) 263. இதுவுமது கொடியான் கூர்ங்கணை குளிப்பத்தன்றொழில் முடியா னவிதலு மூதா னந்தம்
1 தொல். புறத். சூ.19, இளம்; சூ.24, ந.மேற்; திருச்சிற். 71; சீவக. 2344; சிலப். 25 : 78-86. |