பக்கம் எண் :

(இ - ள்.) இறந்தோன்றன்னுடைய நாமத்தை அன்புற்றுச் சொல்லினும் முன்புசொன்ன துறையென்று சொல்லுவர் அறிவுடையோர் எ-று.

வ - று. நின்று நிலமிசையோ ரேத்த நெடுவிசும்பில்
சென்று கழிந்தான் செருவெய்யோன் - என்றும்
அழலுங் கதிர்வே லவன்புகழ் பாடி
உழலு முலகத் துயிர்.

(இ - ள்.) 1தற்பராய் நின்ற பூமியினுள்ளோர் துதிப்ப நீடும் பெரிய வானிலே போயினான், பூசல்விரும்புவோன்; எந்நாளும், எரியும் ஒளி வேலினையுடையவனது கீர்த்தியைச் சொல்லிச் சுழலும், எல்லாவுலகத் துயிரும் எ-று.

(15)

(காஞ்சிப் பொதுவியற்பால்)
(சூத்திரம் 12).

மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி
பெருங்காஞ் சிய்யே பொருண்மொழிக் காஞ்சி
புலவ ரேத்தும் புத்தே ணாட்டொடு
முதுகாஞ் சிய்யொடு காடுவாழ்த் துளப்பட
5மையறு சீர்த்தி வருமிரு மூன்றும்
பொய்தீர் காஞ்சிப் பொதுவியற் பால.

என்-னின், இதுவும் பொதுவியற்பாலவாமாறுஉணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) முதுமொழிக் காஞ்சி முதலாகக்காடு வாழ்த்து ஈறாகச் சொல்லப்பட்ட ஆறும் பொதுவியற்பாலவாம் எ-று.

அவற்றுள் :-

269. முதுமொழிக் காஞ்சி

பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருண்முடி புணரக் கூறின்று.

(இ - ள்.) எல்லோரும் கொண்டாடும் அறிவுடையோர்குற்றம் நீக்கி ஆராயும் உலகத்தியலுள் முடிந்த பொருளாகியஅறம்பொருளின்பத்தை அறியச் சொல்லியது எ-று.

வ - று. ஆற்றி னுணரி னருளறமாமாற்றார்க்குப்
போற்றார் வழங்கிற் பொருள்பொருளாம்-மாற்றிப்
புகலா தொழுகும் புரிவளையார் மென்றோள்
அகலா தளித்தொழுக லன்பு.

(இ - ள்.) நெறியான் அறியின், அருள் தன்மமாகும்; வறியவர்க்குப் பரிகரியாராய்க் கொடுப்பிற் பொருள் பொருளாம்; மாறி விரும்பாது ஒரு நெறிப்பட நடக்கும் முறுக்குவளையினையுடையோர்தம் மெல்லிய தோளை நீங்காதே அளித்து நடக்குமது காதலாம் எ-று.

(1)


1. (பி-ம்.) 'தற்பரராய்'