பக்கம் எண் :

348. கோழி வென்றி

வ - று. பாய்ந்து மெறிந்தும் படிந்தும்பலகாலும்
காய்ந்தும்வாய்க் கொண்டுங் 2கடுஞ்சேவல் -ஆய்ந்து
3நிறங்கண்டு வித்தகர் நேர்விட்டகோழிப்
புறங்கண்டுந் தான்வருமே போர்க்கு.

(இ - ள்.) எழப்பாய்ந்தும் காலின் முள்ளை யிட்டிடித்தும் தாழ்ந்தும் பலகாலும் கோவித்தும்4கூவியும், கடிய சேவற்கோழி, ஆராய்ந்து கோழிகளின் 5நிறமறிந்து கோழிநூல்வல்லவர் சொல்லுக்குச் சொல் ஒப்பாகவிட்ட கோழியைப் புறங்கண்டும் தான் பின்பும் போர்க்கு வாரா நின்றது எ-று.

புறங்கண்டும் போர்க்கு வரும்.

சொல்லுக்குச் சொல் வெல்லும், ஆமைக்கு ஆமை வெல்லும், தெங்குக்கு தெங்கு வெல்லும் எனக் கோழிகளின் 4நிலமறிந்துவிடுதல்

வித்தகர் - கோழிநூல் வல்லவர்.

(6)

349. 1தகர்வென்றி

வ - று. அருகோடி நீங்கா தணைதலுமின்றித்
திரிகோட்ட மாவிரியச் சீறிப் - பொருகளம்
புக்கு மயங்கப் பொருது புறவாயை
நக்குமா நல்ல தகர்.

(இ - ள்.) சேர ஓடி மீளாதே மிகக்கிட்டுதலும் இன்றிப் புரிந்த கொம்பினையுடைய எதிர்த்த தகர்கெடக் கோபித்துப் போர்க்களத்தே புக்குக் கலங்கப் பொருது புறவாயினை நக்கும் , நல்ல தகர் எ-று .

(7)

350. யானை வென்றி

(வ - று.) கஞ்சுகம் வாய்த்த கவளந்தன் கைக்கொண்ட
குஞ்சரம் வென்ற கொலைவேழம் - துஞ்சா
துழலையும் பாய்ந்திறுத் தோடாது தான்றன்
நிழலையுந் தான்சுளிக்கு நின்று.

(இ - ள்.) அட்டிமதுரமிட்டுத் திரட்டின கவளத்தைத் தன்கையிலே கொண்ட யானையை வென்ற கொலைத்தொழிலையுடையவேழம், உறங்காதே கணையத்தையும் பாய்ந்து முறித்து ஓடாதே தான் தன்னுடைய நிழலையும் வெகுண்டு நின்று துகைக்கும் எ-று.

உம்மை : சிறப்பு .

(8)

351. பூழ் வென்றி

சொல்லுஞ் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்காற்
சொல்லும் பலவுள சொன்னபின் - வெல்லும்


1. பட்டினப். 77, ந. (பி.ம்.)2. 'கடுஞ்சொல்லாராய்ந்து' 3. 'நிறங்கொண்டு' 4. 'கூடியுங்கடிய சொற்கோழி' 5. 'திறமறிந்து'