பக்கம் எண் :

நலம்வர நாடி நடுங்காது நூற்கட்
புலவரா லாய்ந்தமைத்த பூழ்.

(இ - ள்.) நூற்பழக்கமின்றியே சொல்லும் குறும்பூழாடிகள் வேண்டிற்றுச் சொல்லுக, சொல்லுமிடத்துச் சொல்லக்கடவ பல மந்திரமுள, அவற்றைச் சொன்னபின் வென்றிபெறும்; நன்மையுண்டாக ஆராய்ந்து கலங்காது நூலிடத்து அறிவுடையாரால் இலக்கணம் ஆராய்ந்து மதித்த பூழ் எ-று.

சொல்லக்கடவ மந்திரம் பலவாவன: தீற்றும் அரிசி ஓதுமந்திரமும் பச்சிலை பிசைந்துதடவும்போது சொல்லுமந்திரமும், செவியுள்ளுறுத்து மந்திரமும்

(9).

352. 1சிவல்வென்றி

வ - று. ஒட்டியா ரெல்லா முணரார்புடைத்தபின்
விட்டோட வேண்டுமோ தண்ணுமை - விட்ட
சுவடேற்கு மாயிற் சுடரிழாய் சோர்ந்து
கவடேற்க வோடுங் களத்து.

(இ - ள்.) சபதங் கூறும் சிவலினையுடையாரெல்லாம் அறியார்; எதிர்ச்சிவலைத் தாக்கிய பின்பு தண்ணுமையைக் கைவிட்டோட வேண்டுமோ, இந்தச்சிவல் வந்தபொழுதே இதனுக்கு அஞ்சி ஓடவமையும்; இவர் பொரவிட்டவற்றுள் ஏன்றொன்று எதிர்க்குமாயின், விட்டுவிளங்கும் ஆபரணத்தினையுடையாய், வருந்தி இதன் கவட்டினுட் புகுந்து கண்டோர் நகைக்க ஓடுங் களத்திடத்து எ-று.

ஆதலால் விட்டோட வேண்டுமோ தண்ணுமை.

(10)

353. கிளிவென்றி

வ - று. இலநா முரைப்பதன்க ணெல்வனைநாணப்
பலநாள் பணிபதமுங் கூறிச் - சிலநாளுள்
பொங்கரி யுண்கணாள் பூவைக்கு மாறாகப்
பைங்கிளியைக் கற்பித்தாள் பாட்டு.

(இ - ள்.) நாம் அதனிடத்து இகழ்ந்து சொல்லுஞ் சொல் இல; விளங்கும் வளையினையுடையாய், நீ நாணப்பலநாளும் தாழ்ந்த சொற்களையுங்கூறிச் சிலநாளுள்ளே மிக்க செவ்வரியினையுடைய மையுண்ட கண்ணாள் நம் பூவைக்கு மாறுபடத் தன் பசுங்கிளியைப் பாட்டைக் கற்பித்தாள் எ-று.

நாமுரைப்பு இல.

(11)

354. பூவை வென்றி

வ - று. புரிவொடு நாவினாற் பூவைபுணர்த்துப்
பெரிய வரியவை பேசும் - தெரிவளை
வெள்ளெயிற்றுச் செவ்வாய் வரியுண்க ணாள்வளர்த்த
கிள்ளை கிளந்தவைகீண் டிட்டு.


1. பட்டினப் . 77, ந.