பக்கம் எண் :

(இ - ள்.) பிரியத்தோடு நாவினாலே பூவையானது வகுத்துப் பெரியவான சொல்லுதற்கரிய வார்த்தைகளைச் சொல்லும்; தெரிந்தவளையினையும் விளர்த்த எயிற்றினையும் சிவந்த வாயினையும் செவ்வரி கருவரியாற் சிறந்த மையுண்ட கண்ணினையு முடையாள் தான் வளர்த்தகிளி சொன்ன வார்த்தைகளைக் கிழித்துக் கீழ்ப்படுத்தி எ-று.

கீண்டிட்டுப் பேசும்.

(12)

355.குதிரை வென்றி

வ - று.1ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும்
கந்து மறமுங் கறங்குளைமா- முந்துற
மேல்கொண் டவைசெலீஇ வென்வேலான் மேம்பட்டான்
வேல்கொண்ட கண்ணாளை மீட்டு.

(இ - ள்.) விக்கிதம் வற்கிதம் உபகண்டம் ஜவம் மாஜவம் என்னும் இப்பஞ்சதாரையையும் பதினெட்டுவகைப்பட்ட சுற்று வரவினையும் கழியப் பாய்தலையும் கறுவுதலையும் ஒலிக்குந் தலையாட்டத்தினையுமுடைய குதிரையை முந்துற மேல்கொண்டு முன்பு சொன்னவற்றைச்செலுத்தி வெற்றிவேலைக்கொண்டு மேம்பட்டான், பிறரைவென்று வெற்றிமகளைத் தன்னிடத்து மீட்டுக்கொண்டு எ-று.

(13)

356.தேர்வென்றி

வ - று. ஒலிமணித் திண்டே ருடையாரை வெல்லும்
கலிமணித் திண்டேராற் காளை- கலிமாப்
பலவுடன் பூட்டிப் படர் சிறந்தைந்து
செலவோடு மண்டிலஞ் சென்று.

(இ - ள்.) ஒலிக்கும் மணியையுடைய திண்ணிய தேரினையுடையபகைவரை வெல்லும், ஆரவாரிக்கும் மணிகளையுடைய திண்ணிய தேராலே காளையானவன்; மனவெழுச்சியையுடைய குதிரை பலவும் ஒக்கப் பூட்டிச் செல்லுதல் மிக்க பஞ்சதாரையுடனே பதினெட்டுச்சுற்று வரவும் அமர்ந்து எ-று.

சென்று வெல்லும்.

(14)

357.யாழ்வென்றி

வ - று. பாலை படுமலை பண்ணி யதன்கூட்டம்
கோலஞ்செய் சீறியாழ் கொண்டபின்- வேலைச்
சுவையெலாந் தோன்ற வெழீஇயினாள் சூழ்ந்த
அவையெலா மாக்கி யணங்கு.

(இ - ள்.) படுமலைப்பாலையையும் அல்லாத பாலைகளையும் ஆக்கி அழகு செய்த சிறிய யாழைத் தன் கையிலே கொண்டபின்பு, முன்பு சொன்ன திரிபாலைத்திறமெல்லாம் அமுதச்சுவைதோன்ற வாசித்தாள், சுற்றிய அவையினுள்ளாரையெல்லாம் தன்வசத்தாராக்கி அணங்கு எ-று.

அணங்கு எழீஇயினாள்.

(15)


1. மதுரைக். 389, ந; சீவக. 784.