விதைத்துக் கீர்த்தியைவிளைக்கும் சிவந்த ஒளிவேலாகிய கோலினையுடைய பச்சென்ற கண்ணினாலும் பெருத்த தாளினாலும் சிறந்தயானையாகிய ஏருழவன் அளித்தலால் எம்போல்வார்க்குவறுமையடையா எ-று. இது 3மாட்டேறில்லாஉருவகம். பைங்கண்:பண்பு. (5) 160. களவேள்வி அடுதிற லணங்கார விடுதிறலான் களம்வேட்டன்று. (இ - ள்.) கொல்லும் வலியினையுடைய பேய் வயிறார உண்ணப் பரந்த வலியினையுடையான் களவேள்விவேட்டது எ-று. (வ - று.) பிடித்தாடி யன்ன பிறழ் பற்பே யாரக் கொடித்தானை மன்னன் கொடுத்தான்-1முடித்தலைத் தோளொடு வீழ்ந்த 2தொடிக்கை துடுப்பாக மூளையஞ் சோற்றை முகந்து. (இ - ள்.) பலுவையொத்த பிறழ்ந்த எயிற்றினையுடையபேயுண்ணக் கொடியினையுடைய சேனைமன்னவன் வழங்கினான்; மகுடத்தலையாகியமிடாவில் தோளுடனே வெட்டுண்டு வீழ்ந்த தோள்வளையாற்சிறந்த கையே துடுப்பாக மூளையாகிய அழகிய சோற்றைமுகந்து எ-று. (6) 161. முன்றேர்க் குரவை வென்றேந்திய விறற்படையோன் முன்றேர்க்க ணணங்காடின்று. (இ - ள்.) வென்றெடுத்த வெற்றியான்மிக்க ஆயுதத்தையுடையான் தேரின்முன்பு எ-று. முன் பேயாடும். (வ - று.) உலவா வளஞ்செய்தா னூழிவாழ் கென்று புலவாய புன்றலைப்பே யாடும்-கலவா அரசதிர நூறி யடுகளம் வேட்டான் முரசதிர வென்றதேர் முன். (இ - ள்.) கெடாத நன்மையினைச் செய்தவன்நெடுங்காலம் வாழ்வானாகவெனச் சொல்லிப்புலால்நாறும் வாயினையும் புற்கென்ற தலையினையுமுடையபேய் கூத்தாடும்; பொருந்தாத மன்னர் நடுங்கவெட்டிக்களவேள்வி வேட்டான் முரசுமுழங்க வென்ற தேரின்முன்பு எ-று. முன் பேயாடும். (7) 162. பின்றேர்க் குரவை பெய்கழலான் றேரின்பின் மொய்வளைவிறலியர் வயவரொடாடின்று.
1. சிலப். 26. 242-3. புறநா. 26 : 10; மதுரைக். 34-5. (பி-ம்.) 2. 'மாட்டேற்றில்லா', 'மாட்டேறேலா' |