(வ - று.) கொங்கலர்தார் மன்னருங் கூட்டளப்பக்கூற்றணங்கும் வெங்கதிர்வேற் றண்டெரியல் வேந்தற்குப் - பொங்கும் புனலாடை யாளும் புனைகுடைக்கீழ் வைகக் கனலா துயிலேற்ற கண். (இ - ள்.) திறைகொடாத மதுமலர்ந்த மாலைவேந்தரும்திறைகொடுப்ப இயமனைவருத்தும் வெய்ய ஒளிவேலினையும் குளிர்ந்தமாலையினையுமுடைய அரசனுக்கு மீதெழும் கடலாகியபுடைவையையுடைய நிலமகளும் கைசெய்த குடைக்கீழ்த் தங்குதலான்அழலாவாய் உறக்கத்தை எதிர்ந்தன, விழிகள் எ-று. (29) 184. 1அவிப்பலி வெள்வா ளமருட் 2செஞ்சோறல்ல துள்ளா மைந்த ருயிர்ப்பலி கொடுத்தன்று. (இ - ள்.) தெளிந்த வாட்பூசலிடத்துச் 2செஞ்சோற்றுக்கடனன்றிநினையாத மறவர் உயிரைப் பலியாகக் கொடுத்தது எ-று. ஆவியென்பது அவியெனக் குறுகிநின்றது. (வ - று.)3சிறந்த திதுவென்னச்செஞ்சோறு வாய்ப்ப மறந்தரு வாளம ரென்னும் - பிறங்கழலுள் ஆருயி ரென்னு மவிவேட்டா ராங்கஃதால் வீரியரெய் தற்பால வீடு. (இ - ள்.) தலைமைமிக்கது இதுவெனச் சொல்லிச் செஞ்சோற்றுக்கடன் தப்பாதபடி சினங்கொண்டவாட்பூசலென்னும் பெருத்தநெருப்பினுட் பெறுதற்கரிய பிராணனென்னும் அவியைக் கொடுத்தார்; அவ்விடத்ததுவால், வீரத்தையுடையார் கிட்டுதற்பகுதியையுடையசுவர்க்கம் எ-று . (30) 185. சால்பு முல்லை வான்றோயு மலையன்ன சான்றோர்தஞ் சால்புரைத்தன்று. (இ - ள்.) ஆகாசத்தைக் கிட்டும் வரையையொத்தசான்றாளர் தம்முடைய அமைதியைச் சொல்லியது எ-று . (வ - று.) உறையார் விசும்பி னுவாமதிபோல 4நிறையா நிலவுத லன்றிக் - குறையாத வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ சங்கம்போல் 5வான்மையார் சால்பு. (இ - ள்.) மழைநிறைந்த ஆகாயத்திடத்து 6உவாநாள்மதியை யொப்ப நிறைந்து மன்னுதலல்லது குறையாத மரக்கலம்பிளக்கும் கடலிடத்துப் பலபொருளினையும் பெறினும்வேறுபடுமோ , சங்கம்போலத் தூய்மையையுடையாரமைதி !எ-று . (31)
1. சிலப். 5 : 76-88, அடியார். வி. 2. சீவக. 2240; கம்ப. கும்ப. 156; கலிங்க.477; வி. பா. 17 -ஆம் போர்.20 3. தொல். புறத். சூ. 17, இளம். மேற். 4. மதுரைக். 202-4; புறநா. 182. (பி.ம்.)5. 'வாய்மையார்'. 6. 'உவாநாளைமதியை'. |