செயப்படு பொருளாவது ஒரு வினைமுதல் செய்யும் தொழிலினை உறுவது என்று விளக்கியுள்ளார். சாத்தன் குழையை உடையன் என்ற தொடரைச் சாத்தன் குழையை உடையன் எனக் கருதுகிறான் என விளக்கினார் வினைமுதல் சாத்தன், அவன் தொழில் உடையன் எனக் கருதுதல், அத்தொழிலினை உறுவது குழை. இங்ஙனம் நச்சினார்க்கினியர் தெளிவாக உரைத்த விளக்கங் கொள்ளாது மலைவாகப் பொருள் கொண்டு இடர்ப்படுகிறார் முனிவர் என்பது வெளிப்படை. |