சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

166 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  கூறுமிடத்து உடன் நிகழ்ச்சியை விளக்கினார் என்பது இவ்வாசிரியர் கருத்து.

இச் செய்திகளில் பெரும்பாலன நச்சினார்க்கினியர் தொல்.சொல். 74இல்
உரைக்கப்பட்டன.
 

  ‘அதனின் இயறல் அதற்றகு கிளவி
அதன்வினைப் படுதல் அதனின் ஆதல்
அதனின் கோடல் அதனொடு மயங்கல்
அதனொடு இயைந்த ஒருவினைக் கிளவி
அதனொடு இயைந்த வேறுவினைக் கிளவி
அதனொடு இயைந்த ஒப்பல் ஒப்புரை
இன்னான் ஏது ஈங்கென வரூஉம்
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.’
 
தொல்.சொல்.74

என்ற நூற்பாவை உட்கொண்டு, அதன் உரையில் கூறப்பட்டன யாவும் ஈண்டு
விளக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் அதனின் இயறல், அதற்றகு கிளவி, அதனின் ஆதல், அதனிற் கோடல்
என்பன கருவி; இன்னான் ஏது என்பதும் கருவி; அதன் வினைப்படுதல் வினைமுதல்;
ஏனைய உடன் நிகழ்ச்சிப் பொருளன.

ஆசிரியனொடு மாணாக்கன் வந்தான்- வருதற்றொழில் இருவருக்கும் ஒத்தலின்,
அதனொடியைந்த ஒருவினைக்கிளவி.

பொன்னொடு இரும்பு அனையர் நின்னொடு பிறரே- எங்ஙனம் பொன்னுக்கும்
இரும்புக்கும் ஒப்புமை இல்லையோ, அங்ஙனம் உனக்கும் பிறர்க்கும் ஒப்புமை இல்லை
என்று கூறுதலின், ஒப்பு அல்லாததனை ஒப்பாகக் கூறும் ஒப்பல் ஒப்புரையாகும்.