|
87 |
நகரத் தாறு மநுடத் தடைவே
யேனை யாறுங் கேட்டைபூ ரட்டாதி. |
|
|
(7) |
| 88 |
1பத்திய பகரத் தொருநான் கிரண்டா
றுத்திர மத்தஞ் சித்திரை யாகும். |
|
|
(8) |
| 89 |
மகரத் தாறு மூன்று மூன்று
மகமா யிலியம் பூர மாகும். |
|
|
(9) |
| 90 |
யாவே யுத்திரட் டாதி யேனை
யூயோ மூலமென் றுணர்ந்திசி னோரே. |
|
|
(10) |
| 91 |
யூயோ விரண்டு மேனாண் மூலம்
யாவே யுத்திரட் டாதிநாள் பெறுமே. |
|
|
(11) |
| 92 |
ஒருநான் குரோகணி வகர மவ்வகை
மற்றை நான்கு மகசிர மாகும். |
|
|
(12) |
| 93 |
2மூவகை யாய்ச்செய் தொன்றுமூன் றைந்தே
ழட்டம ராசி வைநா சியக்கால்
விட்டனர் பின்னர் மேவினர் கொளலே. |
| |
(13) |
| 94 |
இரண்டீ ரிரண்டா றெட்டொன் பானெனத்
திரண்ட நாளே செல்வம் புகுதரும். |
| |
(14) |
| 95 |
நன்மை பொருள்பே றின்பந் தருமெனத்
தொன்னெறிப் புலவ ருரைத்தனர் துணிந்தே.
அவை, -மூவகை யொன்பதின் முதன்முத னாளாம். |
| |
(15) |
|
[பி-ம்.] 1 பற்றிய.
2 “சொல்லியநாள் இருபத்தேழையும் ஒன்பதொன்பதாக
மூன்று கூறாக்கிப் பாட்டுடைத்தலைவனியற்பெயரின் முதலெழுத்தினாளைத்
தொடங்கிக் கூறுகளை யெண்ண, ஒன்று மூன்று ஐந்து ஏழ்வரிற் பொருந்தா.
அல்லாத நாட்களுட் பாட்டுடைத்தலைவன் பெயர் முதலெழுத்தினிராசி தொடங்கி
எட்டாமிராசிநாட்களும் பொருந்தா. வைநாசியமாகிய எண்பத்தெட்டாங்கால் நின்ற
நாளும் பொருந்தாது” என்பது வச்சணந்திமாலையுரை. |