79 |
ஐவகைக் குறிலு மகரமுத லாக
வல்லூ றாந்தை வலியான் குருகே
மெல்லியன் மயிலென விளம்பின ரிவற்றின்
பொருத்தமும் விருத்தமும் பகையும் பலனும்
விரித்தினி தெண்ணி மேவினர் கொளலே. |
|
(1) |
80 |
எண்ணப் பட்ட அகரமுத லைந்தும்
வல்லூ றாந்தை வலியான் குருகே
மெல்லியன் மயிலென விளம்பிய வியற்கையிற்
புள்ளென விளம்பும் புலவரு முளரே.
பரணர். |
|
(2) |
9.- நாள்.1 |
81 |
2மொழிக்கு முதலா கியவெழுத் துக்கட்
கோதிய நாள்வகை யியற்றுதல் கடனே. |
|
(1) |
82 |
உயிர்முத னான்குஞ் 3செயிர்தபு கார்த்திகை
ஐந்து மூன்று மவற்றி னடைவே
வந்தபூ ராட முத்திரா டம்மே. |
|
(2) |
83 |
ககர வருக்க வகைநாள் விரிப்பி
னான்கு மிரண்டு மூன்று மூன்று
மோண மாதிரை புனர்பூசம் பூசம். |
|
(3) |
84 |
சகர நான்கைந் தொருமூன் றிவற்றின்
வகைநா ளிரேபதி முதன்மூன் றென்ப. |
|
(4) |
85 |
ஞகர 4வருக்கத் தொருமூன் றவிட்டம்.
|
|
(5) |
[ஞா, ஞெ, ஞொ. உ-ம்: ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.] |
86 |
தகர வருக்கத் திரண்டேழ் மூன்றற்கு
வகைநாள் சோதி விசாகஞ் சதயம். |
|
(6) |
|
1 ‘அமுதெழுத் தல்லா வேனை யெழுத்து
நாளொடு புணர்த லேத மின்றே’
(90)
என்று ஒரு சூத்திரம்மட்டும் தனியே எழுதப்பட்டுளது . [ச. பி.]
[பி-ம்.] 2 நாமநாண் மொழிக்குமுத லாகிய வெழுத்து.
3 செயிர்தீர். 4 வருக்கத்து மூன்று மவிட்டம். |