70 |
ஒகரக் குகர முதாசீன மாகு
மெகரம் பகை1யா மெனல். |
|
(17) |
71 |
நட்புப் பகையாம் பகையுநட் பாமவை
வைத்த முறையே 2கொளல்3 |
|
(18) |
7. - கன்னல். |
72 |
குணபாற் பரிதி தென்பா லியமன்
குடபால் வருணன் வடபாற் சோமன்
றிசைமுக னடுவாந் தெய்வ நிலைகளிற்
குறிலைந் தமைத்து முதன்மூன்றுங் கொள்கென
நெறியறி புலமை யறிஞர்நேர்ந் தனரே. |
|
(1) |
73 |
அருக்க னியமன் வருணன் சோமன்
பிரமனுந் தெய்வ நிலையெனப் பேசுவர். |
|
(2) |
74 |
4அகரமுத லாக முறையா னெய்தவத்
தெய்வந் தம்மேல் வைக்கப் படுமே.  
கபிலர் |
|
(3) |
75 |
உரைத்த குறிலைந் தொரோவொன் றாக
வருக்கனொ டாகு மவ்வாறு நாழிகை. |
|
(4) |
76 |
அகரந்தானே யருக்கனோ டுதிப்ப
விகர மின்புற வெய்தி யிருக்கு
முகர நடக்கு மெகர முறங்கு
மொகரந் துஞ்சுமென் றுரைத்தனர் புலவர். |
|
(5) |
77 |
அவரவர் பெயர்முத லெழுத்துவந் துதிப்ப
வவரவர்ப் பாடி னாக்கந் தருமே. இந்திரகாளியார். |
|
(6) |
78 |
இராப்பொழு திற்கு மிவ்வகை கொள்க. |
|
(7) |
|
[பி-ம்.] 1 யாகு மே. 2 கொளின். 3
இதற்குப்பின், ‘உய்த்துணர்ந்து நாடி னுயிர்மெய்ககு மிவ்வகையே,
வைத்துணர்ந்து கொள்க வகுத்து’ என்று ஒரு சூத்திரம் காணப்படுகிறது.
[ச.பி.] 4 அம்முத.
|