|
99 |
ஈரசை யகவன் மூவசை நான்கு
நேரிறில் வௌ¢ளை நிரையிறில் வஞ்சி
நாலசை பொதுமற் றோரசைச் சீரே. |
|
|
(1) |
| 100 |
மூவசை 1யெண்சீர் கணமென மொழிந்தனர்
ஈரசை நாலசை யோரசை யொழித்தே. |
|
|
(2) |
| 101 |
கணமே மூவசைக் கூட்ட மாகும்.
கபிலர். |
|
|
(3) |
| 102 |
முற்பாட் டெடுப்பின் முதல¦ ரசைச்சொல்
சொற்பான் மங்கலச் சொல்லொடு தோன்றி
நிற்பினுங் கொள்ளார் நெறியுணர்ந் தோரே. |
|
|
(4) |
| 103 |
நன்மைசெய் கடவு ணாடி னவற்றிற்குத்
தொன்னெறி மரபி 2னின்மை யானே
நாலசைச் சீரு மேலோ ரொழித்தனர். இந்திரகாளியார். |
|
|
(5) |
| 104 |
நீடிய மானன் றிங்க ணிலநீர்
சூரியன் வான மங்கி காற்றென
வியம்பினர் தெய்வ நலம்பெறு புலவர். |
|
|
(6) |
| 105 |
3நேரசை மூன்றிய மான னதற்குச்
சீர்புனை நாளே பரணி வாழ்நாண்
மற்றது பயக்குமென் றுய்த்துரைத் தனரே. |
| |
(7) |
| 106 |
நிரைநேர் நேர்நீண் மதிய மதற்கு
வருநாண் மகசிர மலிபுக ழாகும். |
| |
(8) |
| 107 |
நிரையசை மூன்று நிலக்கண மதற்குத்
தருநாள் கேட்டை திருமிகத் தருமே. |
| |
(9) |
| 108 |
நீர்க்கண நேர்நிரை நிரைநாள் சதயம்
பார்க்கதிர்ப் பெருக்கம் பார்க்கு மென்ப. |
| |
(10) |
|
[பி-ம்.] 1 யொண்சீர். 2 னின்மை யான.
3
இபமானனைச் சுவர்க்கம் என்னும் பெயராற் கூறுவர் வெண்பாப் பாட்டியலார்.
இந்திரகணமென்பர் நவநீதப்பாட்டியலுரைகாரர். “இந்திர கணமே பெருக்கஞ்
செய்யும், சந்திர கணமே வாழ்நா டருமே”-மாமூலம்: என்பது
நவநீதப்பாட்டியலுரை மேற்கோள். |