|
109 |
கண்ணிய நேர்நிரை நேர்வரிற் கடுங்கதிர்
நண்ணிய நோய்தரு நாள்புனர் பூசம். |
|
|
(12) |
| 110 |
நிரைநிரை நேர்தாம் வரினது வானம்
பெருகிய கேடது 1தருநா ளோணம். |
|
|
(13) |
| 111 |
நெருப்பின் கணநிரை நேர்நிரை கார்த்திகை
விருப்புறு நாள திடுக்கண் செய்யும். |
|
|
(14) |
| 112 |
காட்டிய நேர்நேர் நிரைவரிற் காற்றது
நாட்டறை போக்குநாட் சோதி யாகும். |
|
|
(15) |
| 113 |
நிற்பன தீக்கண நான்கவை நீக்கி
நற்கண நான்கவை நாட்டினர் கொளலே. |
|
|
(16) |
| 114 |
நீரே நிலனே வாே நீண்மதி
சீரிய மானன் செந்தீத் தெறுகதிர்
காற்றெனக் கிளர்ந்த கூற்றன வென்ப. |
|
|
(17) |
| 115 |
அவைதாம்,
நேர்முத லாகி நிரையிணை பின்வரி
னீர்க்கண மென்ப நெறியுணர்ந் தோரே. |
| |
(18) |
| 116 |
நிரைமூன் றியைந்தது நிலனெனத் தகுமே. |
| |
(19) |
| 117 |
முந்துநிரை யிணைந்து நேரிறு மூவசை
யந்தர கணமென் 2றறிதல் வேண்டும். |
| |
(20) |
| 118 |
முதனிரை யாகி யிணைநேர் வழிவரி
னதுமதிக் கணமென் 3றறிந்தனர் கொளலே. |
| |
(21) |
| 119 |
4நேரசை மூன்றிய மானன் கணமே. |
| |
(22) |
| 120 |
நேர்நடு வாகி நிரையிரு பாலுஞ்
சேரு மாயிற் செந்தீக் கணமே. |
| |
(23) |
| 121 |
நிரைநடு வாகி நேரிரு பால்வரி
னலர்கதிர்க் கணமென் றறிந்தனர் கொளலே. |
| |
(24) |
|
[பி-ம்.] 1 நாளோண மென்ப. 2 றறைதல்.
3 றறைந்தனர்.
4 ‘நேர்முச் சீரிய மானன் கணமே’ (30) [ச-பி.] |