பக்கம் எண்: தேடுக
பக்கம் : 14 பன்னிருபாட்டியல்

122

ஈறுநிரை யாகி யிணைநேர் முன்வரின்
மாறி வந்த மாருத கணமே.
 

(25)

123 1நிலனு மதியு நீருமிய மானனு
நலமிகு முதல்வரிற் பிறநான் கும்பகை.
 

(26)

124 யாவர்செய் யுட்கு மினமொடு புணரு
மூவசைச் சீரே 2முதனிற் பனவே.
 

(27)

125 அவைதாம்,
பெருக்கஞ் செய்தலின் வாழ்நாள் பயத்தலிற்
றருக்கிய சீர்த்தி தன்னைத் தருதலின்
மிகுதிரு வாக்கலின் வேந்தர்க்கும் பிறர்க்குந்
தகுமெனப் பகரினுந் தகாதுமற் றச்சீர்க்
குரிய நாளொடு செய்யுட் செய்யும்
பொருபடைக் குரிசினாள் பொருந்தாக் கடையே.
 

(28)

126 அவைதாம்,
தேயம் போக்குதல் செல்வத்து விளிதல்
சூனிய மாதல் சுழனோ யுறுத
லூனம் பயக்குமென் றுரைத்தன ராயினு
மாதி யமுதெழுத் தாகிய சீர்கட்
கோதிய தெய்வத் திற்குரித் தாக
வோதிய நாளொடு பாடப் படுமே.
 

(29)

127 எல்லாக் கணமு நாணல மிலவெனிற்
பொல்லாங்கு தருமெனப் புகல வேண்டும். இந்திரகாளியார்.
 

(30)

128 மங்கல மமைந்த சொல்லொடு பொருந்திய
வீரசை நான்கினு ணேரீ றொழித்து

 
  1 “நேரசை மூன்றிய மான னிரைப்பின்பு நேரிரண்டு
சேர்வன திங்க ணிரையசை மூன்றுஞ் செழுநிலமா
நேரசைப் பின்னர் நிரையிரண் டாய்வரி னீர்க்கணமாந்
தேரிய லல்குற் றிருவே யிதுநல்ல சீர்க்கணமே.”
  என்பது நவநீதப்பாட்டியல்
 
  [பி-ம்.] 2 முன்னிற் பனவே.
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்