|
134 |
சொல்லெனப் படுமவை சொல்லுங் காலைத்
திருப்பொன் பூமி புனன்மணி கடல்யா
றெழுத்தமு தெழின்மழை பசுங்கதிர் செஞ்சுடர்
நாள்சொன் ஞெண்டு நாட்டிய பரிமலை
கருட னருந்ததி மற்றிவை யென்ப
நிலைபெறு மங்கல நெறிநிற் பனவே.
பொய்கையார். |
|
|
(2) |
| 135 |
செப்பிய வுடம்பொடு சேரா துயிர்முத
னிற்பன மக்கட் காமென நேர்ந்திலர்
மற்றவை கடவுளர் முனிவர்க் காமே. |
|
|
(3) |
| 136 |
உயிரொடு புணரா மென்மையு மிடையுஞ்
செயிரிற் றீமையுஞ் செப்பத் தகுமே. |
|
|
(4) |
| 137 |
ஓதிய மெய்யொடு புணரா துயிரெழுத்
தாதி நிற்பி *னானந் தம்மே. |
|
|
(5) |
| 138 |
உடம்பு பிரிவுயிர் சாத றானே.
இந்திரகாளியார். |
|
|
(6) |
| 139 |
1நரகரும் விலங்கு மமுதொடு வரினவை
புகரில வென்ப புலமை யோரே.
பரணர். |
|
|
(7) |
| 140 |
மூன்றைந் தேழொன் பானெழுத் தான்ற
வொற்றுட னெண்ணிமுன் சொற்ற முறையிற்
பல்பொருள் படவரூஉஞ் சொல்லா லகற்றி
யொருபொருட் டாகி வருமொழி பற்றித்
திரித லொழியத் திருந்திய சொல்லினுட்
2டெரிவோர் வகையுளி மறுத்து நட்டது
மங்கலச் சொல்லென வகுத்தனர் புலவர். |
| |
(8) |
|
141 |
முன்னிலை யெழுத்தின் †வியநிலை நலனே
‡சமநிலை யாயின் முதல்வற் கூனம். |
| |
(9) |
|
* ஆனந்தம் - சாக்காடு.
[பி-ம்.] 1 இச்சூத்திரத்துக்குமுன், ‘எழுத்தின் கிழத்தி
நாமக ளாதவிற், பெண்ணெழுத் தல்லது முன்வைத் துரையார்’ என்று
ஒருசூத்திரம் காணப்படுகிறது. 2டிரவோர். [ச-பி.]
† வியம் - ஒற்றையெண். ‡ சமம் - இரட்டையெண். |