|
4.-உண்டி. |
31 |
அமுதென விடமென 1வருமிரு வகையு
முணவெனப் புலவ ருரைத்தன ருளரே. |
|
(1) |
|
|
32 |
நஞ்சென வமுதென நவிலவும் படுமே. பொய்கையார். |
|
(2) |
33 |
உணவே யமுதமும் விடமு மாகும். அவிநயனார். |
|
(3) |
34 |
உயிர்க்குறி னான்கொடு கசதப நமவ
2மயக்கற வமுத வெழுத்தாகு மென்ப.
3அவை:-
அ, இ, உ, எ, க, ச, த, ப, ந, ம, வ. |
|
(4) |
35 |
இவ்வுயிர் மெய்யோ டியைந்தன கொளலே. |
|
(5) |
36 |
ஆஓ விரண்டும் யரல மூன்றுந்
தாவிலிவ் விருவகைக் கூட்டத் தியைந்தவு
மளபு மாய்தமு மைவகைக் குறுக்கமு
4முளமலி புலவ ருரைத்தனர் நஞ்சென்
றவையொரு பெயர்மருங் கணைய நிற்பி
5னவையுறு துஞ்சலு நடுக்கமுஞ் செய்யும். |
|
(6) |
37 |
இருவகைக் கூட்டத் தியைந்தமேற் கூறிய
ஆகார வோகாரத் தொடுய ரலக்க
ளென்னு மொற்றொடு மியைந்தவுயி ரளபெடை. |
|
(7) |
38 |
ஐவகைக் குறுக்கமு மறையுங் காலை
இகர உகர ஐகார ஔகார
மகர மென்னு மிவற்றின் குறுக்கம். |
|
(8) |
39 |
ஆ ஓ யரல முதலிய வளபெடை
யாய்தமைங் குறுக்க முளப்பட வெல்லாம்
விடமென மொழிப மெய்யுணர்ந் தோரே. பரணர். |
|
(9) |
|
|
[பி-ம்.] 1விருவகை யெழுத்து. 2மயக்கறு மமுதெழுத்தாகு;
எனப்பதினொன்று மமுதென மொழிப. 3 ‘அவைதாம், அஇ உஎ கசதந பமவ, வெனப்பதி
னொன்று மமுதென மொழிப’. 4முளமகிழ். 5னவையுறு துஞ்சலுங் கெடுதலுஞ்;
னவையுறத் துஞ்சலுங் கெடுதலுஞ். |