|
எழுத்தியல் 3 |
|
3-கதி. |
19 |
வானவர் மக்க ணரகர் விலங்கென
வூனமில் கதியே யொருநான் காகும். |
|
(1) |
20 |
கதியெனப் படுபவை காண்டக விரிப்பிற்
றேவர் மக்க ணரகர் விலங்கென
மேவிய கதிக ளீரிரண் டாகும். இந்திரகாளியார். |
|
(2) |
21 |
தேவர் மக்க ணரகர் விலங்கென
மேவிய நான்கே யெழுத்தியல் கதியே. பரணர். |
|
(3) |
22 |
அவற்றுள்,
உயிர்க்குறில் வல்லின மீற்றெழுத் தொழியப்
பயிர்ப்புறு வானவர் கதியெனப் படுமே. |
|
(4) |
23 |
தேவர் கதியே தெரியுங் காலை
அஇ உஎ கசட தபவே. பரணர். |
|
(5) |
24 |
மக்கட் கதியே நெட்டுயிர் நான்கொடு
மிக்க சிறப்பின் ஙஞண நமவே. |
|
(6) |
25 |
அவைதாம்,
ஆஈ ஊஏ ஙஞண நமக்கள்
மேவிய மக்கட் கதியென விளம்புவர். |
|
(7) |
26 |
ஒழிந்த ஐஔ ஆய்த வெழுத்துங்
கழிந்த வளனவு நரகர் கதியே. |
|
(8) |
27 |
ஒ ஓ விரண்டும் யரல ழறவெனத்
தொக்கன வைந்தும் விலங்கின் கதியே. |
|
(9) |
28 |
மன்னுவர் தேவர் மக்கள் செய்யுளுண்
மன்னா விலங்கொடு நரகர் கதியே. |
|
(10) |
29 |
விலங்கு 1நரகும் விலங்கின வென்ப. இந்திரகாளியார். |
|
(11) |
30 |
1நரகும் விலங்கும் வரைவ ரீண்டே
தேவரு மக்களு மேவின பாட்டே. |
|
(12) |
|
|
[பி-ம்.] 1 நரகரும் |