5.-பால். |
45 |
ஆண்பால் பெண்பா லலியென நின்ற
மூன்றே பாலென மொழிந்தனர் புலவர். |
|
(1) |
46 |
இருவகை யைங்குறி லாண்பா லென்ப. |
|
(2) |
47 |
அகரமோ டைங்குறி லென்றா ராண்பால்.1 |
|
(3) |
48 |
நெடிலே ழிருவகை பெண்பா லென்ப. |
|
(4) |
49 |
ஒற்று மாய்தமு மலியெனப் படுமே. |
|
(5) |
50 |
ஒற்றின் வருக்க மொன்பதிற் றிரட்டியும்
பெற்ற வாய்தமும் பேடெனப் படுமே. |
|
(6) |
51 |
அவ்வவ் வெழுத்தே யப்பாற் குரிய
விரவினும் வரையா ரலியெழுத் தொழித்தே. |
|
(7) |
52 |
2அவ்விரு பாற்கு மலியெழுத் தாகா
தம்முண் மயங்கினுந் 3தாவின் றென்ப. |
|
(8) |
53 |
உயிரீ ராறு மாணென மொழிப
வுயிர்மெய் யெல்லாம் பெண்ணென மொழிப
வுடம்பெழுத் தெல்லா நபுஞ்சக மாகும். பொய்கையார். |
|
(9) |
6.-தானம். |
54 |
குறிலைந் துடனெடில் கூட்டி நின்ற
ஐ ஔ விரண்டும் இ உ வடக்கிப்
பால குமார வரசு மூப்பு
மரணமென் றைவகைத் தானம் வகுத்தனர். |
|
(1) |
55 |
முன்பிற் செய்யுண் முதலெழுத் ததற்குப்
பொருத்தமும் விருத்தமும் பகையுங் கொளலே. |
|
(2) |
|
அகத்தியர் பாட்டியல். |
|
|
1சங்கத்திலுள்ளதோர் ஏட்டுச்சுவடியிற்
பின்வருஞ் சூத்திரங்களும் காணப்படுகின்றன. “ஆணெழுத் தென்ப ரகரமொடைங்குறில்” , “நெட்டெழுத் தெல்லாம் பெண்ணெனப் படுமே”.
2இது பரணர்பாட்டியலில் உள்ளதென்பது “குற்றெழுத்தாடூஉ”
என்னும் நவநீதப்பாட்டியலுரையால் விளங்குகின்றது.
[பி-ம்.] 3தவறின்றதுவே. |