பக்கம் எண் :

9. களங்காட்டல் 103

674.

சவலையுறு மறிவினரா யிகந்தார் மாட்டும்
      சந்தோடம் விளைத்தென்றுஞ் சலிப்பி லாதார்
கவலையுறும் பெரும்பிறவிப் பௌவ முற்றும்
      காய்ந்தெரித்த கடுங்கோபங் காண்மின் காண்மின்.

(6)
 

வேறு

 

675.

வாராத பெருவாழ்வு பெற்றா மெனச்சொல்லி
      மாய்கின்ற பொருண்மீது மால்விட்டுளார்
பேராத வானந்த மயபூ ரணத்தோடு
      பிரியாமை காண்மின்கள் காண்மின்களே.

(7)
  

676.

புல்லாக மேநங்கள் வடிவென்றிருந்தார்கள்
      பொன்றாத பரிபூ ரணச்சோதியாம்
நல்லாக மாயெய்த வவர்செய்த செயலின்று
      நன்றாதல் காண்மின்கள் காண்மின்களே.

(8)

675. “பழிப்பாகி யொருகாலு மிதுகொண்டு கௌவுற்ற பயனற்ற பொருள்விட்டெலாம், அழித்தாலு மழியாத பொருள்பேணி யிவருற்ற வாராமை காண்மின்களோ.” அஞ்ஞ.