பக்கம் எண் :

106 பாசவதைப் பரணி

692.

தகாநந்தந் தலைமீது தன்னடித்தா மரைசூட்டிச்
சுகாநந்தந் தந்தனன்காண் சும்மேலோ சும்முலக்காய்.

(16)
   

693.

ஊன்றுவது மஞ்ஞான மூன்றுமத னாலுதித்துத்
தோன்றுவதுந் துடைத்தனன்காண் சும்மேலோ சும்முலக்காய்.

(17)
  கூழடுதல்  
  வேறு  

694.

பவவினை யுடைய பற்கள்
      பண்பிலா ருடைய பற்கள்
எவைகளு மிடித்தீ ராகில்
      யாவையு முலையுட் பெய்யீர்.

(18)
  

695.

இருவினை விறகெ ரித்தங்
      கென்பெலா முருக்கு மன்பாம்
திருவினை யுள்ள வண்ணம்
      சீர்பெறக் குழைக்கச் சொல்லீர்.

(19)
  

696.

எற்பத பதார்த்தஞ் செல்லா
      திருப்பதா யின்ப முற்றும்
தற்பத பதார்த்தம் பார்க்கச்
      சாந்தியை யிருத்திக் கொள்ளீர்.

(20)
  கூழடுதல்

 
  வேறு

 

697.

தழைத்த சுதையுந் தீம்பாலும்
      தண்ணென் கனியுந் தாமாக
இழைத்த வடிசி லதைமெல்ல
      இறக்கும் பசியு மிறக்குமால்.

(21)

694. “மிடையிரு வினைகொள் பற்கள் மேவரு மறியார் பற்கள், அடையவ மிடித்தீ ராயி னடங்கலு முலையுட் பெய்யீர்” அஞ்ஞ.

695. “இழைக்கும்வல் வினையெரித்திங் கென்பெலா முருக்கி யுள்ளங், குழைக்குமெய்ப் பத்தி வந்து குறைவறக் குழைக்கச் சொல்லீர்” அஞ்ஞ.

696. பி - ம். ‘தற்பரபதார்த்தம்’