698. | பெருமை யுடைய பெருமானார் பிறவி யறுக்குந் திருவடிக்கீழ் ஒருமை யுடைய வடியவர்கள் உள்ளக் கலங்கள் விளக்குமால். | (22) |
| | |
699. | தேவி யடங்க வுளக்கலங்கள் செப்புங் கடங்க ளொடுமுள்ள ஆவி யடங்க வமுதுசெய்க என்ன வவளு மருந்தினளால். | (23) |
| |
700. | நாடுந் தேவி பிரசாதம் நாளு மயில்வீ ரயலாகி வாடுங் கூளி தமக்குங்கூழ் வாரீர் நிறைய வாரீரே. | (24) |
| |
701. | கூடித் திரியு முடல்போகக் குறித்து வீடு புகுமாறு தேடித் திரியும் பேய்களுக்குத் திகைப்புத் தீர வாரீரே. | (25) |
| |
702. | நிலையா விதனை நிலையென்று நின்று பசித்தே நிலைகாண அலையா வமுது தருகென்னும் அப்பேய் தனக்கும் வாரீரே. | (26) |
| |
703. | இல்லா ததனை யுளதென்றே இருந்திங் கழிந்தே னிளைப்பாறச் சொல்லா ரமுதந் தருகென்னும் தூங்கற் பேய்க்கும் வாரீரே. | (27) |
| |
704. | இற்பேய் பிடித்துப் பெறலரிய இன்பப் பொருளைக் குறியாத பொற்பேய் தனக்கு வயிறாரப் போத வாரீர் வாரீரே. | (28) |
698. கலங்கள் - பாத்திரங்கள். “தண்மை யாரும்வகை மீளு மாளுடைய தம்பிரானரிய தாள்கடாம், உண்மை யானுரிய வன்பரின்புறு முளக்கலங்களை விளக்கியே” அஞ்ஞ.
699. கடங்கள் - பானைகள்.
700. பி - ம். ‘ப்ரசாதநீர்’