பக்கம் எண் :

10. கூழ். 109

712.

எழுதும் பிடகம் பலபிதற்றி
      இன்ப முத்தி கந்தமைந்தும்
முழுதுங் கெட்டுப் பெறவி்ருக்கும்
      முழுப்பேய் தனக்கும் வாரீரே.

(36)
  

713.

தெளியு முறைமை யுணராது
      தீது நன்றுந் தெரியாது
விளியு முடலை நானென்னும்
      வெறும்பேய் தனக்கும் வாரீரே.

(37)
  

714.

ஒளிக்கு மொளியார் காணுமிடத்
      துணரும் பழியாந் திறமுணர்ந்தும்
களிக்கும் வாமப் பேய்வந்தாற்
      கதறக் கதற வடியீரே.

(38)
  

715.

இன்னு மின்ன நிலையெய்தி
      இளைத்தே னென்ன விரங்கிவரு
மன்னு நிலைகண் டெவற்றினுக்கும்
      வயிறு நிறைய வாரீரே.

(39)
 வேறு

716.

ஆரணன்பரவு மாதிதன்கருணை
      யாலடங்கலு மறிந்தபின்
பூரணன்பத யுகங்கள்வந்தனை
      புரிந்துசொல்வர்பல புகழ்களே.

(40)
 பேய்கள் கூழுண்டு பாடுதல்

 வேறு

 

717.

ஒருவடி வைத்தம தேயாக
      உற்றுல கெய்தியெ முச்சிமிசை
திருவடி வைத்தமை பாடீரே
      தெவிட்டாக் கருணையைப் பாடீரே.

(41)

712. இதிற் குறிப்பிக்கப்பட்டவர்கள் புத்தர்கள்.

714. களிக்கும் - கள்ளைக் குடித்து மகிழும்.

717. பி - ம். ‘எழுச்சிமேல்’