பக்கம் எண் :

10. கூழ். 111

724.

வானந்த மண்முத னாமேயாய்
      மற்றொன் றிலாவகை யுற்றென்றும்
ஆனந்த மாகின்ற வாபாடி
      ஆர்த்தெழுந் தார்த்தெழுந் தாடீரே.

(48)
   

725.

விரவியிவ் வண்ணங்கள் பாடிப்பாடி
      விழுந்து மெழுந்தும் வியந்துமாடிப்
பரவி வருங்கண மானவெல்லாம்
      பல்வகை யாக நடஞ்செயுமே.

(49)
  வேறு

 

726.

பொய்யகல மெய்யருளும் பூரணசின் மயமான
ஐயனடி யடித்தொழும்பு மாயிரநூ றாயிரமே.

(50)
  

727.

கமலனார் முதலிமையோர் காணாதிங் கெழுந்தருளும்
அமலனா ரதிசயமு மாயிரநூ றாயிரமே.

(51)
  

728.

என்புருக மயிர்பொடிப்ப விருவிழியும் புனல்சோர
அன்புருவிற் றுதிப்பனவு மாயிரநூ றாயிரமே.

(52)
   

729.

தெருள்பெருகுஞ் சிவஞான தேசிகனார் திருவடிக்கீழ்
அருள்பெருகும் பத்திமையு மாயிரநூ றாயிரமே.

(53)
   

730.

மண்ணுலகத் தெழுந்தருளி மானிடனா யெமையாண்ட்
அண்ணல்திரு நோக்கருளு மாயிரநூ றாயிரமே.

(54)
   

731.

செழிக்கின்ற கழிபாசஞ் சிதைந்தொழியத் திருவருளால்
அழிக்கின்ற வாற்றலுந்தா மாயிரநூ றாயிரமே.

(55)
   

732.

தஞ்சமென வருமடியார் தம்பிறவி தீர்த்தருளி
அஞ்சலென வருள்வனவு மாயிரநூ றாயிரமே.

(56)
  வாழ்த்து

 
  வேறு

 

733.

சந்ததமு முலகுய்யத் தமதடியார் தழைத்தோங்கத்
      தரணி மீது
வந்தருளுஞ் சிவஞான தேசிகனார் பதகமலம்
      வாழி வாழி.

(56)

725. கணம் - பேய்.

733. பி - ம். ‘தேசிகனார் திருக்கருணை வாழி வாழி’