4. பேய்களைப் பாடியது 86. | பஞ்ச வாயிலெனும் வஞ்ச யானைவழி பஞ்சு போன்மெலிய நெஞ்சுபோய் அஞ்சு வாரையட நஞ்சு போலுழலும் அஞ்சு பூதகணம் விஞ்சுமே. | (1) | | | | 87. | தொல்லை யேதொடரு மல்ல லூழின்வழி தொல்லை நீள்பிறவி புல்லவே வல்லை போகலகை யெல்லை போகியன வல்ல வாசிறிது சொல்லுவாம். | (2) | | வேறு | 88. | கொடியவே பிறவியெனக் குறிக்கின்ற வறிவற்று முடியவே கெடுகின்ற மூடரே முழுப்பேய்கள். | (3) | | | | 89. | எக்காலங் களுமறியா விழுதையரே கழுதல்லால் முக்காலங் களுமறிந்து மொழிவனவோ முழுப்பேய்கள். | (4) | | வேறு | | 90. | ஒன்றென நின்றன சிலவே யுகள முரைப்பன சிலவே அன்றென நின்றன சிலவே யாமென நின்றன சிலவே. | (5) | | | | 91. | உருவுரு வென்றன சிலவே யுபய முரைப்பன சிலவே அருவரு வென்றன சிலவே யகணித மென்றன சிலவே. | (6) | | | | 92. | இலதில தென்றன சிலவே யிருமை யுரைப்பன சிலவே அலதல தென்றன சிலவே யருவினை யென்றன சிலவே. | (7) |
86. பஞ்சவாயில் - ஐம்பொறிவாயில். யானை யென்றது புலன்களை ; “உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்பிற்கோர் வித்து” (குறள்) ; “ஐம்புலமாந் தறுகண்மை யானையதி னானைகள்” (277) என்பர் பின். 87. எல்லை போகியன - அளவு கடந்தன. 90. யுகளம் - இரண்டு. “ஒன்றென்று நின்றசில பலவென்று நின்ற சில வுபயத்து நின்றசிலபேய், அன்றென்று நின்றதனை யாமென்று சொல்லி யுட னலகிட்டு விட்டசிலபேய்” அஞ்ஞவதைப். 91. அகணிதம் - கணக்கற்றது. |