| வேறு | | 99. | பதறித் தாநிதி தேடுவ பலகற் றாவன நாடுவ பணியற் றாருட னூடுவ பழியைத் தானனி சூடுவ கதறத் தாமிக வோடுவ கடையிற் போயிசை பாடுவ கவலைச் சாகர மாடுவ கருவிப் பேய்பல கோடியே. | (14) | | | | 100. | சிலுகிட் டேவிழ மோதுவ தெருள்பற் றாதன வோதுவ தெருவிற் போய்நட மாடுவ திசைகெட் டேதடு மாறுவ கலகத் தேமன மேவுவ கவடுற் றேயுரை பாவுவ கலைவிற் றேயுடன் மூடுவ கருவிப் பேய்பல கோடியே. | (15) | | | 101. | தளைபட் டேமனை வாழ்விலே தளர்வுற் றீரென வேகியே தவமெய்ப் பாடுகள் பேசியே தடையற் றேமலர் வாளியால் துளைபட் டேயுடல் யாவுமே துருவிப் பாயலின் மேவியே சுரதச் சாகர மூழ்கிவீழ் துறவிப் பேய்பல கோடியே. | (16) | | | | 102. | கணையொத் தேதம வேடமே கருதத் தான்வளை யாதுமா கடுமைத் தாய்வினை யாவுமே கரையுற் றேமறை வாகியே துணையொத் தேவளர் சூதையே துரியத் தானமெ னாமுனோர் தொடர்புற் றேநனி தோயவீழ் துறவிப் பேய்பல கோடியே. | (17) | | வேறு | | 103. | மனுவைத் தான்விழ வோதுவ மதிகெட் டேதலை மோதுவ வசனத் தானிலை பேசுவ வரைவற் றேபிற வேசுவ தனுவைத் தாமென நாடுவ சகமெய்ப் பாலென நீடுவ தலைகெட் டேதடு மாறுவ சமயப் பேய்பல கோடியே. | (18) | | | | 104. | சாலத் தாமறி யாதன சாதித் தேயுல கோரவர் தாமுற் றேவிழ வோதுவ தாழ்தற் கேசில போதனை ஞாலத் தாரெதிர் வாருமி னாடத் தானினி யேதுள நாவிற் காவன வார்கெனு ஞானப் பேய்பல கோடியே. | (19) |
99. கடை - வாசல். கவலைச் சாகரம் : “கவலைச் சாகர நீச்சுக்குளே” (திருப்புகழ்) ; “கவலைக் காகர மாவன கடைகட் கேநட மாடுவ, கலைவிற் றேயுண வாவன கருவிப் பேய்பல கோடியே” அஞ்ஞவதைப். பி - ம். ‘பலதெற்றாவன’ 100. கவடு - கபடு, வஞ்சனை. 101. தவமெய்ப்பாடுகள் - தவத்திற்குரிய உண்மைச் சொற்கள் ; பாடு - சொல்; “செய்யுமென் பாட்டில்” (நன். சூ. 340) ; தவத்தின் அனுபவங்களுமாம். பி - ம். ‘தளர்வுற்றேமென’ 103. மனு - மந்திரம். “தமைமெய்ப் பாலுண ராதன தனுவைத் தாமென நாடுவ” அஞ்ஞவதைப். |