பக்கம் எண் :

20 பாசவதைப் பரணி

   
110.

பன்ன வன்னிய மாந்திறங் கூறவாய்
      பாழு டம்பெலா மாகிப் படிப்பன
முன்ன வன்சர ணாம்புயம் போற்றியே
      மொழிய மற்றழி மூங்கைக ளாவன.

(25)
   

111.

வெல்லொ ணாதன வெம்பசி வீழ்த்தவே
      மெலிந்து சொல்லற வீழ்ந்துடல் சோர்வன
சொல்லொ ணாதன பாவகங் காட்டவே
      துடிது டித்துத்தந் தொல்வாய் பிளப்பன.

(26)
  

112.

நிலையி லாதன வாய்நிலை பெற்றபோல்
      நின்ற வேதெரிக் கின்ற விழியின
தொலைவி லாத வதீத முணர்த்திடிற்
      றொடர்ந்து பார்க்கத் துறுங்குரு டாவன.

(27)
   

113.

பண்டு நாளையு மின்று மனைவர்க்கும்
      பாடி வீடு பயில்புறங் காடெனக்
கண்டு நீலவெங் காச மறைத்திடக்
      காண்கி லாதுளே வீழ்ந்தவன் கண்ணின.

(28)
   

114.

முற்ற முற்றவுந் தம்புக ழேசொல
      முகடு முட்ட வளர்ந்து முரிப்பன
குற்ற மற்றவ ருற்றவண் பெற்றிகள்
      கூறுங் காலைக் குறள்களே யாவன.

(29)
   

115.

நிறைவி லாத குறைவினை யெய்தியே
      நெற்றி யேற நிமிர்ந்திறு மாப்பன
குறைவி லாத நிறைவினை யெய்தியே
      குலவ வென்னின்வெங் கூன்களே யாவன.

(30)

110. பன்ன அன்னியம். உடம்பெலாம் வாயாகி. மூங்கைகள் - ஊமைகள். “வம்பு கூறி னுடம்பெ லாம்வெறும் வாய்க ளாகி வடித்தற்கு வல்லன, உம்பர் கோனடித் தாமரை போற்றிநின் றுரைக்க வென்னில்வெற் றூமைகளாவன” அஞ்ஞவதைப்.

111. பாவகம் : “பாவ கத்தொன்றி லாதமை காட்டவே படப டத்துத் தம் பாழ்வாய் திறப்பன” அஞ்ஞவதைப்.

112. “பொய்ம்மை யாகிமெய் போல விளங்கிய பொருடெ ரிக்கினற் புற்புதக் கண்ணின, மெய்ம்மையான பொருளை யுளத்தினின் மீண்டு பார்க்கின் வெறுங்குரு டாவன” அஞ்ஞவதைப்.

113. பாடி வீடு - தங்கும் இடம். புறங்காடு - சுடுகாடு. காசம் - கண்ணுக்கு வரும் ஒருவகை நோய்.

114. பி - ம். ‘உற்றவன் பெற்றி’, ‘குறட்களே யாவன’