பக்கம் எண் :

4. பேய்களைப் பாடியது 21


116.

பறையி லார்புன் படிறர் பவனிபோய்ப்
      பார்க்க வோடிப் படரும் பதத்தின
கறையி லாருருத் தாங்கி யுலாவுதல்
      காண்டல் வேண்டுழிக் கான்முட மாவன.

(31)
   

117.

இம்மை யன்றி மறுமையு நண்ணுமா
      றியம்பு நூல்கற் றினிதியங் காமலே
செம்மை யன்றி விதண்டைக ளேபல
      செப்பு நூல்கற்றுத் தெற்றி நடப்பன.

(32)
  

118.

கொல்லுங் கூற்றம் வருஞான்று காறுந்தம்
      கொடிய கும்பிக் குழிக்கிரை தேடியே
கல்லுங் கானுங் கடலு மலைகளும்
      கடந்து தேய்ந்த கடியவெங் காலின.

(33)
   

119.

அரிய நீந்தி யகந்தொறுஞ் சென்றுசென்
      றைய மேற்றுணக் கையிரண் டுற்றன
துரிய நீந்திச் சுகானந்த வீடுபோய்ச்
      சுதையெ டுத்துணச் சொத்திக ளாவன.

(34)
   

120.

வம்பை யேயுளங் கொண்டுல கத்தவர்
      மருளு மாறு குருடு துழாவியே
கம்பை யேடு கயிறு கவளிகைக்
      காட்சி காட்டுமோர் பொத்தகக் கையின.

(35)
   

121.

சிவனி லாத வுருவ மெடுத்தமை
      தேர்ந்து பாரந் திருவடி வைத்தில

 


116. பறை - புகழ் ; ஆகு பெயர் ; பறைதல் - சொல்லுதல், படிறர் - வஞ்சகர். படரும் - போகும்.

117. தெற்றி - பிணங்கி ; சீவக. 972.

118. வருஞான்று காறும் - வரும் காலம் வரையிலும். கும்பி - வயிறு ; வழக்கு ; “வயிறு சாணும் வளர்த்தற் பொருட்டந்த வானஞ் சென்று வரக்காலுடையன” அஞ்ஞவதைப்.

119. சுதை - அமுதம். சொத்திகள் - முடம்.

120. கம்பை - சுவடிகளின் மேலுள்ள பலகை ; கவளிகை - புத்தகம் இடும் உறை ; “கயிறுங் கம்பையு மேடும் பிறர்க்கொரு காட்சி போல்வரும் புத்தகக் கையின” அஞ்ஞவதைப்.

121. இலாத உருவம் சிவன் எடுத்தமை ; என்றது அவர் குரு மூர்த்தியாக எழுந்தருளியதை. சிவன், சமன் : வகரத்துக்கு மகரம் எதுகையாக வந்தது ; “சேவலங் கொடியோன் காப்ப, ஏம வைக லெய்தின்றா லுலகே” குறுந். கடவுள்.